Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • நடிகர் அஜித்குமாரின் தந்தை காலமான நிலையில், அவரது மறைவிற்கு முதலமைச்சர் இரங்கல்

நடிகர் அஜித்குமாரின் தந்தை காலமான நிலையில், அவரது மறைவிற்கு முதலமைச்சர் இரங்கல்

By: vaithegi Fri, 24 Mar 2023 3:38:44 PM

நடிகர் அஜித்குமாரின் தந்தை காலமான நிலையில், அவரது மறைவிற்கு முதலமைச்சர் இரங்கல்

நடிகர் அஜித்குமாரின் தந்தை மணி என்கிற சுப்பிரமணியம் உடல்நல குறைவால் சென்னையில் காலமானார். இதனை அடுத்து அவருக்கு வயது 84. கடந்த 4 ஆண்டுகளாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், இன்று அதிகாலை உயிரிழந்தார். இதனால் நடிகர் அஜித் குமாரின் குடும்பத்தினர் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

சென்னை பெசன்ட் நகர் மயானத்தில் இன்று அவரது உடல் தகனம் செய்யப்படவுள்ளது. அஜித் குமாரின் தந்தை காலமானதை தொடர்ந்து திரை உலகினர் , தலைவர்கள், நட்சத்திரங்கள் பலரும் அவரது மறைவிற்கு தங்களது இரங்கல் தெரிவித்து கொண்டு வருகின்றனர். இதேபோல பலர் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி கொண்டு வருகின்றனர்.

chief minister,ajith,condolence ,முதலமைச்சர் ,அஜித் ,இரங்கல்

இந்நிலையில் அஜித்குமாரின் தந்தை மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது இரங்கல் தெரிவித்துள்ளார். இதயத்து இது தொடர்பாக அவர் வெளியிட்ட இரங்கல் அறிக்கையில் குறிப்பிட பட்டுள்ளதாவது, நடிகர் திரு அஜித்குமார் அவர்களின் தந்தை திரு. சுப்பிரமணியம் அவர்கள் உடல்நலக்குறைவால் மறைந்த செய்தி கேட்டு வருந்தினேன் .

தந்தையின் பிரிவால் வாடும் திரு அஜித்குமார் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என அதில் குறிப்பிட்டுள்ளார்.

Tags :
|