- வீடு›
- பொழுதுபோக்கு›
- வரலாற்றை திரித்து படம் எடுத்துள்ளார் என இயக்குனர் மணிரத்னம் மீது புகார்
வரலாற்றை திரித்து படம் எடுத்துள்ளார் என இயக்குனர் மணிரத்னம் மீது புகார்
By: Nagaraj Sat, 21 Jan 2023 10:27:04 PM
சென்னை: இயக்குனர் மணிரத்னம் மீது புகார் மனு... வரலாற்றை திரித்து பொன்னியின் செல்வன் படத்தை இயக்கியதாக இயக்குனர் மணிரத்னம் மீதான புகாரின் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் என்பவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலைத் தழுவி இயக்குநர் மணிரத்னம் இயக்கிய அதே பெயரில் வெளியான திரைப்படத்தில் வரலாறு திரிக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
Tags :