- வீடு›
- பொழுதுபோக்கு›
- நாகூர் தர்காவில் இசையமைப்பாளர் ரஹ்மான் வழிபாடு
நாகூர் தர்காவில் இசையமைப்பாளர் ரஹ்மான் வழிபாடு
By: Nagaraj Tue, 03 Jan 2023 5:13:52 PM
நாகை: நாகூர் தர்காவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வழிபாடு நடத்தினார்.
நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் தர்கா கந்தூரி விழாவில், பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பங்கேற்று, நாகூர் ஆண்டவர் சந்நிதியில் வழிபாடு செய்தார்.
466-ஆம் ஆண்டு கந்தூரி விழா கடந்த 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய நிலையில், விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தாபூத்து எனப்படும் சந்தனம் பூசும் வைபவம், இன்று அதிகாலை நாகூர் ஆண்டவர் சமாதியில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர். விழாவில் பங்கேற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு, தர்கா நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
Tags :
rahman |