- வீடு›
- பொழுதுபோக்கு›
- தேசத்தை திரும்பிப் பார்க்கச் செய்துள்ள விருதாளர்களுக்கு வாழ்த்துக்கள்
தேசத்தை திரும்பிப் பார்க்கச் செய்துள்ள விருதாளர்களுக்கு வாழ்த்துக்கள்
By: Nagaraj Sun, 24 July 2022 00:10:21 AM
சென்னை: நடிகர் கமல் பாராட்டு... ஒட்டுமொத்தமாக 10 விருதுகளை அள்ளி தேசத்தை திரும்பிப் பார்க்கச் செய்துள்ளது தமிழ்த் திரையுலகம் என தேசிய விருது வென்றவர்களுக்கு நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
68வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு நேற்று வெளியானது. அதில், சூரரைப் போற்று படத்துக்கு சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த திரைக்கதை, சிறந்த பின்னணி இசை, சிறந்த படம் என 5 விருதுகள் கிடைத்துள்ளன. அதேபோல் வசந்த் இயக்கத்தில் வெளியான சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படத்துக்கு, தமிழின் சிறந்த படம், சிறந்த துணை நடிகை, சிறந்த படத்தொகுப்பு என 3 விருதுகளும், மண்டேலா படத்துக்கு சிறந்த வசனம், சிறந்த அறிமுக இயக்குநர் என 2 விருதுகளும் கிடைத்துள்ளன. ஆகமொத்தம் தமிழ் சினிமாக்கள் மட்டுமே 10 தேசிய விருதுகளை வென்றுள்ளன.
இதனைத் தொடர்ந்து பலரும் தங்களது பாராட்டையும், வாழ்த்தையும் விருது
வென்றவர்களுக்கு தெரிவித்து வருகின்றனர். மேலும், தேசிய விருதை தமிழ்
சினிமாக்கள் இப்படி கொத்தாக அள்ளி வருடங்கள் ஆகிவிட்டன என கூறி ரசிகர்கள்
மகிழ்ச்சியை தெரிவித்துவருகின்றனர்.
இந்நிலையில் நடிகரும், மக்கள்
நீதி மய்யத்தின் தலைவருமான கமல் ஹாசன் தேசிய விருது வென்றவர்களுக்கு
வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,
“சூரரைப் போற்று திரைப்படம் 5 தேசிய விருதுகளைக் குவித்துள்ளது
பெருமையளிக்கிறது.
சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும், மண்டேலா என
ஒட்டுமொத்தமாக 10 விருதுகளை அள்ளி தேசத்தை திரும்பிப் பார்க்கச்
செய்துள்ளது தமிழ்த் திரையுலகம். விருதாளர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த
வாழ்த்துகள்” என குறிப்பிட்டுள்ளார்.