- வீடு›
- பொழுதுபோக்கு›
- பொன்னியின் செல்வன் வெற்றி கொண்டாட்டத்தில் எழுந்த சச்சரவு
பொன்னியின் செல்வன் வெற்றி கொண்டாட்டத்தில் எழுந்த சச்சரவு
By: Nagaraj Thu, 10 Nov 2022 08:01:56 AM
சென்னை: பொன்னியின்செல்வன் வெற்றி கொண்டாட்ட பார்ட்டியில் எழுந்த சச்சரவால் மணிரத்னம் அப்செட் ஆனதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அண்மையில் பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக பெரிய பார்ட்டி ஒன்று நடைபெற்றது. இதில் நட்சத்திரங்கள் உட்பட படக்குழுவினர்களும் கலந்துகொண்டனர். மணிரத்னத்தின் அழைப்பை ஏற்று இந்த நிகழ்வில் ரஜினிகாந்தும் கலந்து கொண்டார்.
மிகச் சிறப்பாக நடந்துகொண்டிருந்த இந்த பார்ட்டியில் லைகா நிறுவனத்தை
சேர்ந்த ஒருவர் மணி ரத்னத்தின் பெண் உதவி இயக்குனரிடம் தவறான முறையில்
நடந்து கொண்டுள்ளார்.
இதனால், அந்த பார்ட்டி கடைசியில் அடிதடியில்
முடிந்துள்ளதாம். இந்த சம்பவத்தினால் லைகா நிறுவன உரிமையாளர் சுபாஷ்கரன்
வருத்தமடைந்துள்ளாராம். அதே போல் இந்த சம்பவம் மணி ரத்னத்திற்கும் பெரும்
வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.