Advertisement

தமிழ் தொலைக்காட்சி சீரியல் நடிகைக்கு கொரோனா வைரஸ் உறுதி

By: Monisha Thu, 02 July 2020 11:01:22 AM

தமிழ் தொலைக்காட்சி சீரியல் நடிகைக்கு கொரோனா வைரஸ் உறுதி

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் அரசியல்வாதிகள், திரை உலக பிரபலங்கள் என பலரும் நோய் தொற்றுக்கு உள்ளாகி வருகின்றன. இந்த நிலையில் ஏற்கனவே ஒரு சில திரையுலக பிரபலங்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் தற்போது தமிழ் தொலைக்காட்சி சீரியல் நடிகை ஒருவரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளார்

தமிழில் வாணி ராணி, அரண்மனைக்கிளி உள்ளிட்ட ஒருசில சீரியல்களிலும், தெலுங்கில் பல சீரியல்களிலும் நடித்து வருபவர் நவ்யா சுவாமி. இவர் சமீபத்தில் தெலுங்கு தொலைக்காட்சி சீரியல் படப்பிடிப்பில் இருந்தபோது திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

corona virus,serial actress,navya swamy ,கொரோனா வைரஸ்,சீரியல் நடிகை,நவ்யா சுவாமி

இந்நிலையில் நேற்று அவருடைய கொரோனா பரிசோதனையின் ரிசல்ட் வந்த போது அதில் பாசிட்டிவ் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் உடனடியாக படப்பிடிப்பு செல்வதை நிறுத்திவிட்டு தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.

மேலும் தொலைக்காட்சி நடிகை நவ்யா சுவாமிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவருடன் தொடர்பில் இருந்த அனைவரும் பரிசோதனை செய்து கொண்டு தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Tags :