Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • உளவுத்துறை எச்சரிக்கையை அடுத்து நடிகர் ஷாரூக்கிற்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கல்

உளவுத்துறை எச்சரிக்கையை அடுத்து நடிகர் ஷாரூக்கிற்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கல்

By: Nagaraj Mon, 09 Oct 2023 5:39:15 PM

உளவுத்துறை எச்சரிக்கையை அடுத்து நடிகர் ஷாரூக்கிற்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கல்

மும்பை: இந்தி திரையுலகின் வசூல் மன்னன், ஜாம்பவான் என்று ரசிகர்களால் புகழப்படும் நடிகர் ஷாரூகிற்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்திய திரையுலகில் ரசிகர்கள் கொண்டாடும் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் ஷாருக்கான். இவர் நடிப்பில் இந்த ஆண்டு பதான், ஜவான் என இரண்டு திரைப்படங்கள் வெளிவந்துள்ளன.

danger,life,order,security,shah rukh khan,y-plus ,ஆபத்து, உத்தரவு, உயிர், ஒய்-பிளஸ், பாதுகாப்பு, ஷாருக்கான்

இந்த இரண்டு படங்களுமே பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பியதோடு ரூ.1000 கோடிக்கு மேல் வசூலை அள்ளிய நிலையில், ஜவான் படம் ஒரு படி மேல் சென்று ரூ.1100 கோடி வசூலை பெற்று சாதனை படைத்தது.

இரண்டு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்த ஷாருக்கானின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உளவுத்துறை எச்சரித்ததையடுத்து அவருக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

Tags :
|
|
|