- வீடு›
- பொழுதுபோக்கு›
- போட்டியாளர்கள் மீது கடுமையாக சாடிய தனலட்சுமி
போட்டியாளர்கள் மீது கடுமையாக சாடிய தனலட்சுமி
By: Nagaraj Mon, 21 Nov 2022 10:32:33 PM
பிக்பாஸ் சீசன் 6 பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் மிக வேகமாக நடந்து வருகிறது. தற்போது 15 போட்டியாளர்கள் உள்ளனர். இதைத் தொடர்ந்து சாந்தி, அசால் கரூர், மகேஸ்வரி, செரீனா மற்றும் நிவாஷினி ஆகியோருடன் வாரத்திற்கு ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட்டுள்ளார்.
இன்று காலை வெளியான இரண்டாவது ப்ரோமோ வீடியோவில் தனலெட்சுமி இருந்தார். முதலில் கதறி அழுதவர், பின்னர் ரச்சிதா மகாலெட்சுமி மீது மோதினார். தற்போது மைனா நந்தனி மற்றும் ஷிவினிடம் எகுறுகிறார்.
இந்நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டின் தலைவராக மைனா நந்தனி
ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து,
தனலெட்சுமி கதறி அழுது எதிர்ப்பு தெரிவித்ததோடு, ஜனனியும் உடந்தையாக
இருந்துள்ளார்.
இதுபற்றி ஷிவின் கேட்டபோது, ‘உன்
பாயின்ட் என்கிட்ட எடுத்து வைக்காத’ என்று மிகவும் கோபமாக தனலெட்சுமி
கூறினார். அந்த வகையில் இன்றைய இரண்டாவது ப்ரோமோ இணையத்தில் வைரலாகி
வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் தனலட்சுமி மீது கடுங்கோபத்தில் உள்ளனர்.
எப்போது பார்த்தாலும் அடுத்தவர்களிடம் சண்டை போட்டு தான் நல்லவள் என்று
காட்டிக் கொள்ளும் தனலட்சுமிக்கு இந்த வாரம் வாக்குகள் குறைந்தாலும்
ஆச்சரியப்படுவதில்லை. தலைவர் ஆகி எவிக்சனில் இருந்து தப்பிக்க பார்த்தார்.
அது முடியவில்லை என்பதால் இப்படி நடந்து கொள்கிறார் என்று கருத்துக்கள்
பதிவு செய்யப்பட்டு வருகிறது.