Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • ஒரே நாளில் இரண்டு நிகழ்வுகள் வந்தது எனக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது; தனுஷ் டுவீட்

ஒரே நாளில் இரண்டு நிகழ்வுகள் வந்தது எனக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது; தனுஷ் டுவீட்

By: Monisha Tue, 17 Nov 2020 3:44:56 PM

ஒரே நாளில் இரண்டு நிகழ்வுகள் வந்தது எனக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது; தனுஷ் டுவீட்

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராகிய தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ரவுடி பேபி மற்றும் கொலைவெறி பாடல் குறித்து டுவீட் பதிவு செய்துள்ளார்.

இன்று ஒரே நாளில் இரண்டு நிகழ்வுகள் ஒன்று சேர வந்தது எனக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது என்றும் ஒரு பக்கம் ரவுடி பேபி பாடல் ஒரு மில்லியன் பார்வையாளர்களை பெற்று உள்ளது. இன்னொரு பக்கம் கொலைவெறி பாடல் ரிலீஸ் ஆகி ஒன்பது வருடங்கள் ஆகி உள்ளது. ஒரே நாளில் இந்த இரண்டு நிகழ்வுகளும் வந்தது பெருமைக்குரியதாக இருக்கிறது என்று தனுஷ் தனது டுவிட்டரில் கூறியுள்ளார்.

rowdy baby,kolaiveri,song,dhanush,twitter ,ரவுடி பேபி,கொலைவெறி,பாடல்,தனுஷ்,டுவிட்டர்

மேலும் முதன்முதலாக தென்னிந்திய பாடலொன்று ஒரு பில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது பெருமைக்குரியதாக உள்ளதாகவும், இதற்கு காரணமான எங்கள் படக்குழுவினர் அனைவருக்கும் என்னுடைய இதயங்கனிந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் தனுஷ் கூறியுள்ளார்.

தனுஷ் நடித்து முடித்துள்ள 'கர்ணன்' மற்றும் 'ஜகமே தந்திரம்' ஆகிய திரைப்படங்களின் ரிலீஸ் தேதிகள் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. தற்போது தனுஷ் ஒரு இந்தி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்துவிட்டு கார்த்திக் நரேன் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார்.

Tags :
|