- வீடு›
- பொழுதுபோக்கு›
- 50 நாளைக்கு இவ்வளவு சம்பளம் பெற்றாரா ஆயிஷா?
50 நாளைக்கு இவ்வளவு சம்பளம் பெற்றாரா ஆயிஷா?
By: Nagaraj Tue, 13 Dec 2022 08:44:38 AM
கேரளா: ஒரு நாளைக்கு பிக்பாஸ் வீட்டில் சம்பளமாக ஆயிஷாவுக்கு ரூ. 28 முதல் ரூ. 30 ஆயிரம் வரை பேசப்பட்டதாக கூறப்படுகிறது. அப்போ 50 நாளைக்கு மேல் இருந்த அவருக்கு எவ்வளவு சம்பளம் என்று பார்த்துக் கொள்ளுங்கள். இது உண்மையா என்பதை ஆயிஷாதான் தெரிவிக்க வேண்டும்.
கேரளாவில் பிறந்து வளர்ந்து பின் மாடலாக தன்னை அடையாளப்படுத்தி தமிழ் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை ஆயிஷா. இவர் ஜீ தமிழில் சத்யா என்ற தொடரில் நடித்துவந்தார். அந்த தொடர் நடிகைக்கு மிகப்பெரிய ரீச்சை கொடுத்தது.
அதில் அவருடன் நடித்த விஷ்ணுவை ஆயிஷா காதலிக்கிறார் என்றெல்லாம் நிறைய வதந்திகள் வந்தன. சத்யா 2 சீரியலுக்காக தனது லுக்கை எல்லாம் மாற்றி நடித்தார், தொடர் முடிவுக்கு வர அப்படியே பிக்பாஸ் 6வது சீசன் பக்கம் வந்தார்.
50 நாட்களை தாண்டி பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்த ஆயிஷா கடந்த வாரம் வெளியேறி விட்டார். பிக்பாஸ் வீட்டில் அதிகம் சம்பளம் வாங்குபவர்களில் ஆயிஷாவும் ஒருவர். ஒரு நாளைக்கு இவருக்கு ரூ. 28 முதல் ரூ. 30 ஆயிரம் வரை பேசப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த சம்பள விவரம் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.