Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • ரஜினி, தனுஷ் வீட்டிலும் கைவரிசை காட்டினாரா ஈஸ்வரி... போலீசார் விசாரணை

ரஜினி, தனுஷ் வீட்டிலும் கைவரிசை காட்டினாரா ஈஸ்வரி... போலீசார் விசாரணை

By: Nagaraj Fri, 24 Mar 2023 8:18:32 PM

ரஜினி, தனுஷ் வீட்டிலும் கைவரிசை காட்டினாரா ஈஸ்வரி... போலீசார் விசாரணை

சென்னை: தனுஷ் வீட்டிலும் திருடினாரா?... சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா வீட்டில் திருடிய வழக்கில் கைதாகியுள்ள ஈஸ்வரி ரஜினி, தனுஷ் வீட்டிலும் திருடியிருக்கலாம் என்ற தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா தனது தந்தையுடன் போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டில் வசித்து வருகிறார். கடந்த 9ம் தேதி ஐஸ்வர்யா தனது லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 60 பவுன் தங்கம் மற்றும் வைர நகைகள் திருடு போனது குறித்து சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதில் ரஜினியின் பணிப்பெண் ஈஸ்வரி, டிரைவர் வெங்கடேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஈஸ்வரியிடம் இருந்து 100 பவுனுக்கும் அதிகமான தங்க நகைகள், 30 கிராம் வைரம், 4 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், திருடிய நகைகளை விற்று சோழிங்கநல்லூரில் சொகுசு வீட்டையும் ஈஸ்வரி வாங்கியுள்ளார்.

aishwarya,dhanush,robbery , ஈஸ்வரி, தனுஷ், ரஜினி, நகைகள், திருட்டு, விசாரணை

இவற்றை ஈஸ்வரியிடம் இருந்து கைப்பற்றிய போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை மந்தைவெளியைச் சேர்ந்த ஈஸ்வரி, கடந்த 2006ம் ஆண்டு முதல் ரஜினி வீட்டில் பணிப்பெண்ணாக பணிபுரிந்து வருகிறார்.

மெல்ல மெல்ல அங்குள்ளவர்களிடம் நெருங்கி பழகிய ஈஸ்வரி, ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவின் நம்பிக்கையையும் பெற்றுள்ளார். ஐஸ்வர்யாவின் லாக்கர் சாவி எங்கே என்று தெரிந்து கொள்ளும் அளவுக்கு வீட்டிற்குள் சுதந்திரம் இருக்கிறது.

அதை பயன்படுத்தி இந்த திருட்டை செய்துள்ளார். ஐஸ்வர்யா 60 பவுன் நகைகளை காணவில்லை என புகார் அளித்த நிலையில், ஈஸ்வரியிடம் இருந்து மேலும் நகைகள் கைப்பற்றப்பட்டது. இதனையடுத்து, ரஜினி, தனுஷ் போன்ற நடிகர்களிடம் ஈஸ்வரி திருடினாரா என போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tags :