- வீடு›
- பொழுதுபோக்கு›
- விவகாரத்துக்கு பின் ஜீவனாம்சம் வாங்கினாரா சமந்தா... வீடியோ வைரல்
விவகாரத்துக்கு பின் ஜீவனாம்சம் வாங்கினாரா சமந்தா... வீடியோ வைரல்
By: Nagaraj Sat, 03 Dec 2022 11:54:41 AM
சென்னை: தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. பாணா காத்தாடி படத்தில் நடிக்க ஆரம்பித்த சமந்தா அடுத்தடுத்த தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறினார். பல கோடி சம்பளம் வாங்கும் நடிகையாக இருந்து வந்த சமந்தா நடிகர் நாக சைதன்யாவை காதலித்து 2017ல் திருமணம் செய்து கொண்டார்.
திருமணமாகியும் படங்களில் நடிக்கவும் செய்த சமந்தா போல்ட்டான கதாபாத்திரத்திலும் நடிக்க ஆரம்பித்தார். ஒருக்கட்டத்தில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து நாக சைதன்யாவை பிரிந்து வாழ்ந்து வந்தார்.
அதன்பின் கிளாமர் ஆக்டிங், போட்டோஷூட் என்று ரசிகர்களை ஈர்த்து வந்தார். தற்போது மயோசிடிஸ் என்ற அரியவகை நோயால் பல மாதங்களாக அவதிப்பட்டு வருகிறார். அவர் தற்போது மேல் சிகிச்சைக்காக தென்கொரியா செல்ல உள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் நாக சைதன்யாவை விவாகரத்து செய்த போது மாமனார் வீட்டில் இருந்து சமந்தாவுக்கு ரூ.250 கோடி ஜீவனாம்சம் கொடுத்ததாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அந்த தொகையை சமந்தா வாங்கவில்லை என்று கூறப்பட்டது.
இதுகுறித்து பாலிவுட்டில் பிரபலமான கரண் ஜோகர் அவரின் நிகழ்ச்சிக்கு சென்ற சமந்தா இதுகுறித்து காமெடியாக ஒரு ரூமர் பரவியதாக கூறியுள்ளார். நான் ஜீவனாம்சமாக ரூ.250 கோடி வாங்கியிருக்கிறேன்.
தினமும் என் வீட்டு கதவை திறந்து காத்திருக்கிறேன், வருமானத்துறையினர் வருவார்களோ என்று யதார்த்தமாக கூறியுள்ளார். இப்படி அவர் கூறிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.