Advertisement

இழுத்தடித்த ஜெயம் ரவி மீது இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கோபம்

By: Nagaraj Fri, 04 Dec 2020 6:32:25 PM

இழுத்தடித்த ஜெயம் ரவி மீது இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கோபம்

ஏ.ஆர்.முருகதாஸ் முடிவு... ஜெயம்ரவி நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் படம் பூமி. எல்லா வேலைகளும் முடிந்து வெளியீட்டுக்குத் தயாராக இருக்கிறது அப்படம்.

அதற்கடுத்து, மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன், இயக்குநர் அகமது படம் ஆகியனவற்றில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இவைதவிர, ஸ்கிரின்சீன் நிறுவனத்துக்கு மூன்று படங்கள் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. அவற்றோடு, இயக்குநர் அட்லி தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்கவும் அவர் ஒப்புக்கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.

jayamravi,known,a.r. murugadoss,that man ,ஜெயம்ரவி, தெரியவரும், ஏ.ஆர்.முருகதாஸ், அந்த நாயகன்

இவற்றோடு, ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் திருக்குமரன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க ஜெயம்ரவியிடம் பேச்சுவார்த்தை நடந்து வந்தது.

கதை மற்றும் தயாரிப்பு நிறுவனம் ஆகியனவற்றால் இப்படத்தில் நடிக்க ஜெயம்ரவிக்குச் சம்மதம் என்றாலும், வரிசையாகப் படங்கள் இருப்பதால் இப்படத்தில் நடிக்க தேதிகள் சொல்லமுடியவில்லை என்று சொல்லிக் கொண்டிருந்தாராம்.

இப்படியே மாதக்கணக்கில் இழுத்ததால் கடுப்பான ஏ.ஆர்.முருகதாஸ், ஜெயம்ரவியை விட்டுவிட்டு வேறு நாயகரை வைத்து இந்தப்படத்தை எடுக்க ஏ.ஆர்.முருகதாஸ் முடிவு செய்துவிட்டாராம்.

இதைத் தொடர்ந்து தற்போது இரண்டு நாயகர்களிடம் தனித்தனியே பேசிக் கொண்டிருக்கிறார்களாம். சரியாக அமையும் போது அந்த நாயகன் யார்? என்பது தெரியவரும் என்கிறார்கள்.

Tags :
|