- வீடு›
- பொழுதுபோக்கு›
- தமிழா, தமிழா நிகழ்ச்சியிலிருந்து விலகுவதாக இயக்குனர் கரு.பழனியப்பன் அறிவிப்பு
தமிழா, தமிழா நிகழ்ச்சியிலிருந்து விலகுவதாக இயக்குனர் கரு.பழனியப்பன் அறிவிப்பு
By: Nagaraj Wed, 08 Mar 2023 10:27:06 AM
சென்னை: விலகுகிறேன் என்று அறிவித்தார்... ஜீ தமிழ் சேனலில் கடந்த 4 ஆண்டுகளாக தமிழா தமிழா என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகரும் இயக்குனருமான கரு.பழனியப்பன், அந்த நிகழ்ச்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
சன் டிவியில் அரட்டை அரங்கமும், விஜய் டிவியில் நீயா நானாவும் வரும் அதே நிகழ்ச்சிதான் ஜீ தமிழ் சேனலின் தமிழ தமிழா என்பது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு வாரமும் மக்கள் ஒரு குறிப்பிட்ட தலைப்பைப் பற்றி பேசுவார்கள், நிகழ்ச்சியை கரு.பழனியப்பன் தொகுத்து வழங்கினார். மேலும் இவரது பேச்சுக்கள் பெரும்பாலும் திராவிட அரசியலை உள்ளடக்கியவை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த நான்கு ஆண்டுகளாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கரு.பழனியப்பன், நிகழ்ச்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ஜீ தமிழ் உடனான நான்காண்டு கால தமிழா தமிழா பயணம் மகிழ்ச்சியான முடிவுக்கு வந்துள்ளது என்று தனது சமூக வலைத்தளப் பதிவில் தெரிவித்துள்ளார்.