- வீடு›
- பொழுதுபோக்கு›
- தன் படத்தின் பாக்ஸ் ஆபீஸ் வசூல் குறித்து தனக்கு கவலை இல்லை ..இயக்குநர் லோகேஷ்
தன் படத்தின் பாக்ஸ் ஆபீஸ் வசூல் குறித்து தனக்கு கவலை இல்லை ..இயக்குநர் லோகேஷ்
By: vaithegi Tue, 10 Oct 2023 3:27:06 PM
தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்து உள்ள பேட்டியில் லோகேஷ் கனகராஜ் கூறியிருப்பதாவது: “என் படம் வசூலிக்கும் தொகை எனக்கு எவ்வித உற்சாகத்தையும் தருவதில்லை. எனவே அதுகுறித்து நான் கவலைப்படுவதும் இல்லை.
மேலும் என் தயாரிப்பாளர் என் படத்தில் முதலீடு செய்யும் பணம் பற்றி மட்டும்தான் நான் கவலை கொள்வேன். அதை எப்படியாவது திருப்பி அளித்துவிட வேண்டும் என்பதில் கண்டிப்பாக அக்கறை எடுத்துக் கொள்வேன்.
அதே போன்று ரூ.150 கொடுத்து டிக்கெட் வாங்கி திரையரங்குக்குள் வருபவர்களை மகிழ்விப்பதில் அக்கறை எடுத்துக் கொள்வேன். அதனைத் தாண்டி, படத்தின் லாபத்தில் எனக்கு பங்கு இருக்கிறது
என்றால் படத்தின் வசூல் குறித்து நான் கவலைப்படலாம். படம் விமர்சன ரீதியாக கொண்டாடப்படுவதே எனக்கு உற்சாகம் தரும்.” இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.