- வீடு›
- பொழுதுபோக்கு›
- பேட்ட திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்து இயக்குனர் கூறியது என்ன?
பேட்ட திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்து இயக்குனர் கூறியது என்ன?
By: Monisha Thu, 18 June 2020 12:43:18 PM
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவான ’பேட்ட’ திரைப்படம் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்றது. நீண்ட இடைவெளிக்கு பின்னர் ரஜினியின் பழைய ஸ்டைல் மற்றும் இளமையான ரஜினியை திரையில் பார்க்க முடிந்ததாக ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர். மேலும் இந்த படம் வசூலில் அளவிலும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இந்த நிலையில் அவ்வப்போது ரஜினி ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் ’பேட்ட’ படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் இதுகுறித்து பேட்டியளித்த இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் கூறியதாவது:-
'பேட்ட' படத்தின் திரைக்கதையை உருவாக்கும்போது அதன் இரண்டாம் பாகம் குறித்து எந்த ஐடியாவும் தனக்கு இல்லை. ஆனால் தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கூறும் கதைகளைக் கேட்டால் உண்மையிலேயே 'பேட்ட' படத்தின் இரண்டாம் பாகம் உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் நேரமும் காலமும் கூடி வந்தால் எதிர்காலத்தில் 'பேட்ட 2' திரைப்படம் உருவாகலாம் என்று அவர் கூறியுள்ளார்.
'பேட்ட' படத்தில் விஜய் சேதுபதி கேரக்டரை ரஜினிகாந்த் கேரக்டர் கொன்று பழி வாங்குவதோடு படம் முடிந்திருக்கும். அதன்பின் என்ன நடந்திருக்கலாம் என்பது குறித்த கற்பனைகளை ரசிகர்கள் அவ்வப்போது தெரிவித்து வருகின்றனர்.