- வீடு›
- பொழுதுபோக்கு›
- போதை அடிமையுடன் என்னை ஒப்பிட வேண்டாம்; நடிகை கங்கனா ரணாவத்
போதை அடிமையுடன் என்னை ஒப்பிட வேண்டாம்; நடிகை கங்கனா ரணாவத்
By: Monisha Mon, 14 Sept 2020 11:55:07 AM
நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கு விசாரணையில் அவரது காதலி ரியா சக்கரவர்த்தியின் வாட்ஸ் அப் உரையாடலை ஆய்வு செய்த போலீசார் போதை பொருள் கும்பலுடன் அவருக்கு தொடர்பு இருப்பதை கண்டுபிடித்து கைது செய்தனர்.
இது தொடர்பாக நடிகை கங்கனா ரணாவத் கூறுகையில், "இந்தி திரையுலகில் கொக்கைன் போதை பொருள் தாராளமாக புழங்குகிறது. இந்த போதை பொருள் அதிக விலை கொண்டது. முன்னணி நடிகர்களின் வீடுகளில் நடக்கும் விருந்துகளில் இந்த போதை பொருளை இலவசமாக வழங்குகிறார்கள். நடிகர் நடிகைகளுக்கு ரத்த பரிசோதனை செய்தால் பலர் சிக்குவார்கள்” என்றார்.
இந்த நிலையில் ரியாவுக்கு ஆதரவாக பேசி வரும் வாரிசு நடிகையான சோனம்கபூர் மராட்டிய அரசையும் மும்பை போலீசையும் விமர்சித்த கங்கனாவின் பங்களா இடிக்கப்பட்டதை கண்டிக்கும் வகையில் ரியாவையும் கங்கனாவையும் ஒப்பிட்டு கருத்து தெரிவித்தார்.
டுவிட்டரில் அவர் வெளியிட்ட பதிவில், "கண்ணுக்கு கண் என்பதுதான் தீர்வு என்பதாக இருந்தால் உலகமே குருடாகி விடும்" என்று தெரிவித்து இருந்தார்.
இதற்கு பதில் அளித்துள்ள கங்கனா ரணாவத், "மாபியா முட்டாள்கள் திடீரென்று ரியாவோடு சேர்த்து எனக்கும் நீதி கேட்க தொடங்கி உள்ளனர். மக்களுக்காக நான் போராடுகிறேன். சிறிய போதை அடிமையுடன் என்னை ஒப்பிட வேண்டாம்" என்று கூறியுள்ளார்.