- வீடு›
- பொழுதுபோக்கு›
- விலங்குகள் நல வாரியம் பிறப்பித்த உத்தரவால் ஈஸ்வரன் படக்குழுவினர் அதிர்ச்சி
விலங்குகள் நல வாரியம் பிறப்பித்த உத்தரவால் ஈஸ்வரன் படக்குழுவினர் அதிர்ச்சி
By: Monisha Fri, 20 Nov 2020 4:03:54 PM
சிம்பு நடிப்பில் சுசீந்திரன் இயக்கிய இயக்கிவரும் ’ஈஸ்வரன்’ என்ற படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் சமீபத்தில் வெளிவந்து மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில் 'ஈஸ்வரன்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசரை சமூகவலைதளத்தில் பகிர்வதை உடனடியாக நிறுத்த வேண்டும் என விலங்குகள் நல வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
இது குறித்து விலங்குகள் நலவாரியம் அனுப்பியுள்ள நோட்டீஸில் கூறியிருப்பதாவது:- "விலங்குகள் நல வாரியத்தின் தடையில்லா சான்றிதழ் இல்லாமல் பாம்பு காட்சி பயன்படுத்துவது விதிகளுக்கு எதிரானது.
விலங்குகள் நலவாரிய அனுமதியின்றி பாம்பு காட்சி பயன்படுத்தியது தொடர்பாக 7 நாட்களுக்குள் படக்குழுவினர் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது
மேலும் 'ஈஸ்வரன்' திரைப்படத்தின் போஸ்டர், டீசர் ஆகியவற்றை பகிர்வதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று விலங்கு நல வாரியம் உத்தரவிட்டுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த உத்தரவு காரணமாக படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.