- வீடு›
- பொழுதுபோக்கு›
- குழந்தை போல் பரவசம் அடைந்தேன்... நடிகர் பிரபாஸ் மகிழ்ச்சி
குழந்தை போல் பரவசம் அடைந்தேன்... நடிகர் பிரபாஸ் மகிழ்ச்சி
By: Nagaraj Fri, 07 Oct 2022 7:39:51 PM
ஐதராபாத்: , “ஆதிபுருஷ்’ படத்தின் டீசரை முதன்முறையாக 3டி எஃபெக்டில் பார்த்ததும் குழந்தை போல் பரவசம் அடைந்தேன் என்று நடிகர் பிரபாஸ் தெரிவித்துள்ளார்.
தேசிய விருது பெற்ற ஓம் ராவத், ‘தன்ஹாஜி: தி அன்சங் வாரியர்’ என்ற இந்தி படத்தை இயக்கியவர். இவர் இயக்கிய ‘ஆதிபுருஷ்’ படம் ராமாயணக் கதையைத் தழுவி எடுக்கப்பட்டது. இந்தியாவின் பல மொழிகளில் வெளியாகும் இப்படத்தில் ‘பாகுபலி’ புகழ் பிரபாஸ் மற்றும் கீர்த்தி சனோன் கதையின் நாயகியாக நடித்துள்ளனர்.
டி – சீரிஸ் மற்றும் ரெட்ரோஃபைல்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படம், IMAX, 3D வடிவில் அடுத்த ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. படத்தின் டீசரை அயோத்தியில் படக்குழு வெளியிட்டது. ‘ஆதிபுருஷ்’ படத்தின் டீசரில் கிராபிக்ஸ் காட்சிகள் வீடியோ கேம் போலவும், சோட்டா பீம் டீஸர் போலவும் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன.
இப்படத்தில் சைஃப் அலிகான் ராவணனாக நடித்தது விமர்சனத்துக்குள்ளானது. இந்நிலையில், இப்படத்தின் டீசர் ஐதராபாத்தில் பத்திரிகையாளர்களுக்கு 3டி தொழில்நுட்பத்தில் திரையிடப்பட்டது. விழாவில் படம் பற்றி பேசிய நடிகர் பிரபாஸ், “ஆதிபுருஷ்’ படத்தின் டீசரை முதன்முறையாக 3டி எஃபெக்டில் பார்த்ததும் குழந்தை போல் பரவசம் அடைந்தேன்.
இந்த டீசரை 60க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளோம். ஆந்திரா மற்றும் தெலுங்கானா ரசிகர்களுக்கு கண்டிப்பாக திரையரங்குகளில் பார்க்க வேண்டிய படம் இது உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் காத்திருக்கும் வேளையில் அடுத்த 10 நாட்களுக்கு பல ஆச்சரியமான விஷயங்களை வழங்க உள்ளோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.