Advertisement

கன்னட திரையுலகின் பிரபல நடிகர் சேத்தன் கைது

By: Nagaraj Wed, 22 Mar 2023 12:41:45 PM

கன்னட திரையுலகின் பிரபல நடிகர் சேத்தன் கைது

பெங்களூரு: நடிகர் சேத்தன் கைது... இந்துத்துவா குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக நடிகர் சேத்தன் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரை போலீசார் 14 நாள் நீதிமன்ற காவலில் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைத்தனர்.

கன்னட திரையுலகில் பிரபலமான நடிகர் சேத்தன். இவர் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குவார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரதமர் மோடி மாண்டியா வந்தார். மாண்டியா மாவட்டத்தில் உள்ள மாத்தூரில் பெங்களூரு-மைசூர் விரைவுச் சாலையை நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த சந்தர்ப்பத்தில் பிரதமரின் வருகையையொட்டி அங்கு உரிகவுடா-நஞ்சேகவுடாவின் உருவச்சிலைகளை பா.ஜனதாவினர் அமைத்திருந்தனர். அவர்கள் இருவரும் திப்புசுல்தானை கொன்றவர்கள் என்றும் கூறப்பட்டது.

actor,arrest,chetan,controversy,hindutva,opinion, ,இந்துத்துவா, கருத்து, கைது, சர்ச்சை, சேத்தன், நடிகர்

இது அரசியல் தலைவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. பாஜகவுக்கு எதிராக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் சேத்தன் தனது முகநூல் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் ஊரி கவுடா மற்றும் நஞ்சேகவுடா குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்திருந்தார்.

மேலும் இந்துத்துவா குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளையும் பதிவிட்டுள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. பெங்களூரு சேஷாத்திரிபுரம் போலீசில் சிவக்குமார் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து நடிகர் சேத்தனை நேற்று கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது அவரை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து நடிகர் சேத்தனை போலீசார் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைத்தனர். இந்நிலையில், நடிகர் சேத்தனின் வழக்கறிஞர் பெங்களூரு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். மனு மீதான விசாரணையை நாளைக்கு (வியாழக்கிழமை) நீதிபதி ஒத்திவைத்தார்.

Tags :
|
|
|