Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • போதைப்பொருள் விவகாரதத்தில் பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் மனைவி கைது

போதைப்பொருள் விவகாரதத்தில் பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் மனைவி கைது

By: Monisha Mon, 09 Nov 2020 1:15:27 PM

போதைப்பொருள் விவகாரதத்தில் பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் மனைவி கைது

தென்னிந்திய திரையுலகில் போதைப்பொருள் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் ஏற்கனவே கன்னட நடிகைகள் சஞ்சனா கல்ராணி மற்றும் ராகினி திவேதி ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதே வழக்கில் பாலிவுட் நடிகை ரியா சக்கரவர்த்தியும் கைது செய்யப்பட்டு உள்ளார.

மேலும் தீபிகா படுகோன் உள்பட ஒரு சில முன்னணி நடிகைகளிடம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை செய்து கொண்டிருப்பதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அது மட்டுமின்றி கன்னட மற்றும் மலையாள திரையுலகைச் சேர்ந்த இன்னும் ஒரு சிலர் இந்த விவகாரத்தில் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

drugs,bollywood,arrest,pros nadiyatwala,shabana saeed ,போதைப்பொருள்,பாலிவுட், கைது,பிரோஸ் நதியத்வாலா,ஷபானா சயீத்

இந்த நிலையில் பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளர்களில் ஒருவரான பிரோஸ் நதியத்வாலா என்பவரின் மனைவி ஷபானா சயீத் என்பவர் திடீரென போதைபொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்டிருப்பதாக வெளிவந்த தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நேற்று போலீசார் ஷபானா சயீத் வீட்டில் சோதனை செய்தபோது 10 கிராம் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், இது குறித்து விளக்கம் கேட்டு அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Tags :
|
|