Advertisement

தேர்வு எழுத வந்த நடிகை சாய் பல்லவியை சுற்றி வளைத்த சக தேர்வர்கள்!

By: Monisha Wed, 02 Sept 2020 10:51:24 AM

தேர்வு எழுத வந்த நடிகை சாய் பல்லவியை சுற்றி வளைத்த சக தேர்வர்கள்!

திருச்சியில் தேர்வு எழுத வந்த நடிகை சாய் பல்லவியை சுற்றி வளைத்த சக தேர்வர்கள் செல்பி எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

'பிரேமம்' என்ற திரைப்படத்தில் மலர் டீச்சர் என்ற கேரக்டரில் அறிமுகமாகி தென்னிந்தியா முழுவதும் புகழ் பெற்றார் நடிகை சாய் பல்லவி. இவர் அந்த படத்தை அடுத்து தனுஷின் மாரி 2 உள்பட பல திரைப்படங்களில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக தமிழில் சூர்யாவின் என்ஜிகே படத்தில் நடித்தார் என்பதும் தற்போது அவர் தெலுங்கில் மூன்று படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

actress sai pallavi,selection,selfie,trichy,fans ,நடிகை சாய் பல்லவி,தேர்வு,செல்பி,திருச்சி,ரசிகர்கள்

இந்த நிலையில் எம்பிபிஎஸ் படிப்பை முடித்த சாய்பல்லவி, இன்னும் பிராக்டிஷனராக ரிஜிஸ்டர் செய்யவில்லை என்பதால் இதற்கான தேர்வு எழுத இன்று திருச்சிக்கு வந்தார். இந்த தேர்வை எழுத அவர் வந்தது குறித்த செய்தி அறிந்த சக தேர்வர்கள் அவருடன் ஆசை தீர செல்பி எடுத்தனர்.

ரசிகர்களுக்காக முகக்கவசத்தை இறக்கி விட்டு சிரித்த முகத்துடன் செல்பிக்கு போஸ் கொடுத்தார் சாய்பல்லவி. இந்த புகைப்படங்களை ரசிகர்கள் தங்களுடைய சமூக வலைதளத்தில் பதிவு செய்து வருவதால் அந்த புகைப்படங்கள் அனைத்தும் வைரல் ஆகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|