Advertisement

கால்பந்து வீரர்கள் 6 கொரோனா தொற்று உறுதி!

By: Monisha Wed, 20 May 2020 4:41:55 PM

கால்பந்து வீரர்கள் 6 கொரோனா தொற்று உறுதி!

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி அநேக உயிர்களை பலி வாங்கியது. இதனால் அங்கு நடைபெற்று கொண்டிருந்த அனைத்து விதமான கால்பந்து போட்டிகளும், ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று பரவியதற்குப் பின் ஜெர்மனியில் கடந்த சனிக்கிழமை முதன்முதலாக கால்பந்து போட்டிகள் நடைபெற்றன. இத்தாலி, ஸ்பெயின் கால்பந்து கிளப் அணிகளின் வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கிலாந்தில் நடைபெறும் இங்கிலீஷ் பிரிமீயர் லீக் அடுத்த மாதம் 2-வது வாரத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

footballers,coronavirus confirmation,european countries,english premier league ,கால்பந்து வீரர்கள்,கொரோனா தொற்று உறுதி,ஐரோப்பிய நாடுகள்,இங்கிலீஷ் பிரிமீயர் லீக்

இதற்கிடையே 19 கிளப்புகளை சேர்ந்த 748 வீரர்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டதில், 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்ற கிளப்புகள் இன்னும் முடிவை வெளியிடவில்லை. அதன்பின்தான் ஒட்டுமொத்த முடிவுகள் தெரியவரும்.

இத்தாலியில் ஜூன் 14-ந்தேதி வரை போட்டிகளை நடத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஆனால் வீரர்கள் தயாராகி வருகின்றனர். அரசு அனுமதி கிடைத்ததும் போட்டிகள் தொடங்கப்படும்.

Tags :