Advertisement

மராத்திய படத்தில் முதல்முறையாக பாடல் பாடியிள் சித் ஸ்ரீராம்

By: Nagaraj Tue, 04 Oct 2022 9:00:51 PM

மராத்திய படத்தில் முதல்முறையாக பாடல் பாடியிள் சித் ஸ்ரீராம்

சென்னை: முதன்முறையாக மராத்திய படம் ஒன்றில் பாடல் பாடியுள்ளார் சித் ஸ்ரீராம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 2013-ல் வெளியான கடல் படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் அடியே என்கிற பாடலை பாடி பாடகராக அறிமுகமானவர் சித் ஸ்ரீராம்.

அதைத்தொடர்ந்து மறுவார்த்தை பேசாதே, உன் கூடவே பிறக்கணும் என்பது போன்று ரசிகர்களின் மனம் உருகக்கூடிய பாடல்களை தனித்துவமான குரலால் பாடி கவர்ந்த சித் ஸ்ரீராம், தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் இந்தியிலும் என ஐந்து மொழிகளில் பாடல்களை பாடியுள்ளார். வானம் கொட்டட்டும் என்கிற படத்திற்கு இசையும் அமைத்துள்ளார். இந்த நிலையில் முதன்முறையாக மராத்திய படம் ஒன்றில் பாடல் பாடியுள்ளார் ஸ்ரீராம்.

first time,introduction,marathi film,song,joy ,முதல்முறை, அறிமுகம், மராத்திய படம், பாடல், மகிழ்ச்சி

மராத்திய மொழியில் உருவாகியுள்ள ஹர ஹர மகாதேவ் என்கிற படத்தில் வாரே சிவா என்கிற பாடலை பாடியுள்ளார் சித் ஸ்ரீராம். அபிஜித் தேஷ்பாண்டே என்பவர் இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஹிதேஷ் மோடாக் என்பவர் இசையமைத்துள்ளார்.

வரும் அக்டோபர் 25ஆம் தேதி இந்த படம் வெளியாக உள்ளது. மராத்தி மட்டும் அல்லது தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் வெளியாகிறது. இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட சித் ஸ்ரீராம் மராத்திய மொழியில் எனது அறிமுகத்திற்கு இதைவிட ஒரு அருமையான பாடல் கிடைத்திருக்காது என்ற தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

Tags :
|