- வீடு›
- பொழுதுபோக்கு›
- எழுந்து வா பாலு...தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு உருக்கம்
எழுந்து வா பாலு...தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு உருக்கம்
By: Monisha Thu, 20 Aug 2020 3:48:10 PM
பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை கடந்த சில நாட்களாக கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அவ்வப்போது தகவல் தெரிவித்து வருகிறது
இந்த நிலையில் இன்று மாலை 6 மணிக்கு எஸ்பிபி அவர்கள் குணமாக வேண்டி ஒட்டுமொத்த திரையுலகமே அவரது பாடல்களை பாடி பிரார்த்தனை செய்ய உள்ளது. இந்த பிரார்த்தனையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமலஹாசன், இசைஞானி இளையராஜா, இசைப்புயல் ஏஆர் ரகுமான், இயக்குனர் பாரதிராஜா, கவிப்பேரரசு வைரமுத்து உள்பட பலர் கலந்து கொள்ள உள்ளனர்
இந்த நிலையில் எஸ்பிபி விரைவில் குணமாக வேண்டும் என்று பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-
வானுதிர்த்த கதிராக நெல்லூரில் வந்துதிர்த்த இசையே! குழலினிதா? யாழினிதா? என்றால் நின் குரலே இனிதென்பேன். முக்கனி சாறெடுத்து கொம்புத்தேனில் முகிழ்தெடுத்த அருஞ்சுவைக்கு மேலானது நின் குரல் சுவையென்பேன்.
அங்கிங்கெனாதபடி எங்கும் நின் குரல் கேட்க எட்டு திக்கும் எதிரொலிக்க எழுந்து வா பாலு! விரைந்து வா! இன்னிசை பண்ணிசை நல்லிசை அழைக்கிறது எழுந்து வா! பாலு விரைந்து வா! தேனிசைத் தென்றலும் ஏழு சுரங்களும் உன் வரவுக்காக காத்திருக்க ..எழுந்து வா பாலு விரைந்து வா! பாரதிராஜா வேண்டியபடி அகிலம் ஆண்டவனை பிரார்த்திக்க. நீ வருவாய் திருவாய் மலர்வாய். இவ்வாறு கலைப்புலி எஸ் தாணு தெரிவித்துள்ளார்.