- வீடு›
- பொழுதுபோக்கு›
- கோலிவுட்டிலும் 'குரூப்பிசம்'; ஒளிப்பதிவாளர் நட்ராஜ் டுவிட்
கோலிவுட்டிலும் 'குரூப்பிசம்'; ஒளிப்பதிவாளர் நட்ராஜ் டுவிட்
By: Nagaraj Wed, 29 July 2020 12:14:11 PM
பாலிவுட் போல் கோலிவுட்டிலும் நடக்கிறது என்று நடிகர்கள் சிலர் பொங்கி எழுந்துள்ளனர். மும்பையை போல தமிழ் சினிமாவிலும் மிரட்டலும், வாய்ப்பை தட்டி பறிக்கும் வாரிசு அரசியலும் நடப்பதாக, நடிகர்கள் சிலர் வேதனை தெரிவித்துள்ளனர்.
இந்தி திரையுலகமான, பாலிவுட்டில், எந்தெந்த படத்தில், யார் நடிக்க வேண்டும். படக்குழுவில் யார் சேர வேண்டும் என்பதை, வாரிசு நடிகர்கள் அடங்கிய குழு தீர்மானிப்பதால், பலருக்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை என புகார் கூறப்படுகிறது. சமீபத்தில், பாலிவுட் நடிகர் சுஷாந்த் தற்கொலை சம்பவம் பாலிவுட்டை மட்டுமல்லாது, இந்திய திரையுலகையே பரபரப்பாக்கியது.
இதற்கு, சினிமா வாரிசு அரசியலே காரணமாக அறியப்பட்டு, அதனடிப்படையில் சல்மான் கான் உட்பட பல பேரிடம் விசாரணையும் நடந்து வருகிறது. இந்நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ஒலிப்பதிவாளர் ரசூல் பூக்குட்டி ஆகியோர், பாலிவுட்டில் சிலர், வாய்ப்புகளை தட்டிப் பறிப்பதாக புகார் கூறினர்.
இதுகுறித்து நடிகரும், ஒளிப்பதிவாளருமான, 'நட்டி' நட்ராஜ், 'டுவிட்டரில்' கூறியுள்ளதாவது:
தமிழ்
சினிமாவில், தகுதியின்றி, சொந்த பந்தம் அடிப்படையில் வாய்ப்பு தரும்,
'நெப்போடிசம்' இருக்கிறதா, இல்லையா என தெரியவில்லை. ஆனால், 'குரூப்பிசம்'
இருக்கிறது. யாருக்கு என்ன கிடைக்க வேண்டும் என்பதை, யாரோ
நிர்ணயிக்கின்றனர். இவ்வாறு, அவர் கூறியுள்ளார். இதற்கு பாக்யராஜின்
மகனும், நடிகருமான சாந்தனு, டுவிட்டரில் பதிலளித்துள்ளார்.அவர்
கூறியுள்ளதாவது:
நெப்போடிசம் இங்கேயும் உள்ளது. அதே, குரூப்பிசம்
நபர்கள் தான், நம்முடன் யார் வேலை செய்ய வேண்டும் என்பதை தீர்மானிப்பர்.
தரத்தை பராமரிக்க, அவர்கள் ஒரு சிலரை ஆதரிக்கின்றனர். மற்றவர்களும், தங்கள்
தரத்தை அதிகரிக்க அனுமதிக்க மாட்டார்கள். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
தமிழ்
சினிமாவிலும், எந்தெந்த படத்தில், யார் நடிக்க வேண்டும் என்பதை
குறிப்பிட்ட ஒரு குழு தீர்மானிப்பது, வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இது
அனைத்து படத்திலும் நடக்கிறதா அல்லது குறிப்பிட்ட நபர்கள் மீது மட்டுமே
நடத்தப்படும் மறைமுக தாக்குதலா என்பதற்கு விரைவில் விடை கிடைக்கும். இந்த
தகவல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.