- வீடு›
- பொழுதுபோக்கு›
- மாவட்ட தலைவருக்கு கொரோனா பாதிப்பு; தொலைபேசியில் நலம் விசாரித்த நடிகர் சிம்பு
மாவட்ட தலைவருக்கு கொரோனா பாதிப்பு; தொலைபேசியில் நலம் விசாரித்த நடிகர் சிம்பு
By: Nagaraj Sun, 10 May 2020 09:24:06 AM
கொரோனாவால் பாதித்து சிகிச்சை பெற்று வரும் தனது கடலூர் மாவட்ட ரசிகர் மன்ற மாவட்ட தலைவர் ஆனந்தனை நடிகர் சிலம்பரசன் போனில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்துள்ளார்.
சென்னைக்கு அடுத்தபடியாக அதிகளவு கொரோனா பாதிப்புகளை கொண்ட மாவட்டமாக கடலூர் உள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டில் பணியாற்றிய பெரும்பாலானோர் சொந்த ஊருக்கு திரும்பியதால் இத்தகைய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நடிகர் சிம்புவின் கடலூர் ரசிகர் மன்ற மாவட்ட தலைவர் ஆனந்தன் என்பவர் கொரோனாவால் பாதித்து சிதம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த தகவல் அறிந்த நடிகர் சிம்பு, செல்போன் வாயிலாக ஆனந்தனை தொடர்பு நலம் விசாரித்துள்ளார். மேலும் ஆனந்தன் பூரண குணமடைய எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுவதாக தெரிவித்துள்ளார்.