- வீடு›
- பொழுதுபோக்கு›
- என்னங்க இப்படி பண்ணுறீங்க... கோபத்தில் கொந்தளித்த நடிகை கஸ்தூரி
என்னங்க இப்படி பண்ணுறீங்க... கோபத்தில் கொந்தளித்த நடிகை கஸ்தூரி
By: Nagaraj Thu, 07 May 2020 09:25:24 AM
சென்னை: இன்று முதல் தமிழகத்தில் டாஸ்மாக் திறக்கப்படுகிறது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டங்கள் தெரிவித்து வருகின்றனர். திரை பிரபலங்களும் தங்களின் வேதனையையும், கண்டனத்தையும் தெரிவிக்கின்றனர்.
அந்த வகையில் சமூக நலன் குறித்து அதிக அக்கறை காட்டும் நடிகை கஸ்தூரி டாஸ்மாக் திறப்பு குறித்து தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
நடிகை கஸ்தூரி தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், "அரசு செய்வது தவறு. நாடு முழுவதும் நடந்த கூத்தை பார்த்த பிறகுமா மது கடையை திறக்க துணிகிறீர்கள்.
குடி, கொரோனா இரண்டுக்கும் ஒரே சமயத்தில் பலியிடுகிறீர்கள். தமிழக அரசை மன்றாடி கேட்டுக்கொள்கிறேன், கொரோனாவின் தாக்கம் குறைவாக இருக்கும்போது மூடிவிட்டு இப்போது அதிகமாகும்போது திறக்காதீர்கள்.
இதனால் வரும் வருவாயை விட இழப்பு அதிகமாகி விடும். கடையில் வாங்கும் மதுவோடு கொரோனாவை வீட்டுக்கு வீடு அனுப்பி வைக்க வேண்டாம்" என்று கூறியுள்ளார்.