- வீடு›
- பொழுதுபோக்கு›
- தோனி திரைப்பட தயாரிப்பு நிறுவன தலைமை அதிகாரியாக அவரது மாமியார் பொறுப்பேற்பு
தோனி திரைப்பட தயாரிப்பு நிறுவன தலைமை அதிகாரியாக அவரது மாமியார் பொறுப்பேற்பு
By: Nagaraj Fri, 16 June 2023 8:38:39 PM
மும்பை: தோனியின் திரைப்பட தயாரிப்பு நிறுவனமான தோனி என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட்டின் தலைமை நிர்வாக அதிகாரியாக அவரது மாமியார் ஷீலா சிங் உள்ளார்.
இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி சிங் தோனி இணைந்து ‘தோனி என்டர்டெயின்மென்ட்’ என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளனர். தோனியின் மாமியார் ஷீலா சிங் தோனியின் திரைப்பட தயாரிப்பு நிறுவனமான தோனி என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட்டின் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார்.
ஷீலா சிங், தோனியின் மனைவி சாக்ஷி ஆகியோரின் தலைமையின் கீழ் இநிந்றுவனத்தின் வணிகம் சீராக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. தாய்-மகள் இருவரின் தலைமையின் கீழ், நிறுவனம் உருவாக்கப்பட்டு நான்கு ஆண்டுகளில் 800 கோடி ரூபாய் மதிப்பீட்டாக உயர்ந்துள்ளது. ஷீலா சிங் ஒரு பெரிய வணிக அமைப்பிற்கு தலைமை தாங்குவது இதுவே முதல் முறை.
அவர் தனது வாழ்நாளின் பெரும்பகுதிக்கு வீட்டில் வேலை செய்பவராக மட்டுமே இருந்தார். அவரது கணவர் விகே சிங், எம்எஸ் தோனியின் தந்தை பான் சிங்குடன் பணியாற்றியவர்.
இருவரும் தனியார் தேயிலை நிறுவனத்தில் ஒன்றாக பணிபுரிந்தனர். தோனி எண்டர்டெயின்மென்ட்’ என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தமிழில் லெட்ஸ் கெட் மேரிட் என்ற திரைப்படத்தை தயாரித்து வருகின்றனர்.
காதல் கதையம்சம் கொண்ட படமாக உருவாகி வரும் இப்படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார். இதில் ஹரிஷ் கல்யாண், லவ் டுடே படத்தின் மூலம் மிகவும் பிரபலமடைந்த இவானா, நதியா மற்றும் நகைச்சுவை நடிகர் யோகி பாபு நடிக்கின்றனர்.