Advertisement

புஷ்பா படத்தின் தயாரிப்பு நிறுவன உரிமையாளர்களின் வீடுகளில் சோதனை

By: Nagaraj Wed, 19 Apr 2023 7:35:48 PM

புஷ்பா படத்தின் தயாரிப்பு நிறுவன உரிமையாளர்களின் வீடுகளில் சோதனை

ஐதராபாத்: புஷ்பா படத்தின் தயாரிப்பு நிறுவன உரிமையாளர்களின் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது. அமலாக்கத்துறை அதிகாரிகளும் சோதனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா படத்தின் முதல் பாகம் 2021ல் வெளியானது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனத்தின் அலுவலகங்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

film,movie,pushba ,புஷ்பா, தயாரிப்பாளர், சோதனை, வருமான வரி,

புஷ்பாவின் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கரின் அலுவலகம் ஹைதராபாத்தில் உள்ளது. இந்த அலுவலகத்திலும், இந்நிறுவன உரிமையாளர்களின் வீடுகளிலும் வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது. அமலாக்கத்துறை அதிகாரிகளும் சோதனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி புஷ்பா இயக்குனர் சுகுமார் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. 170 கோடி பட்ஜெட்டில் புஷ்பா படம் உருவாகி 350 கோடி வசூல் செய்தபோது, இந்தப் படத்தின் படக்குழுவினர் முறையாக வரி செலுத்தினார்களா? விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

Tags :
|
|