Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • மிக நீண்ட இடைவெளிக்கு பின்னர் படம் தயாரிக்க வந்துள்ளேன்... சௌந்தர்யா ரஜினிகாந்த் பதிவு

மிக நீண்ட இடைவெளிக்கு பின்னர் படம் தயாரிக்க வந்துள்ளேன்... சௌந்தர்யா ரஜினிகாந்த் பதிவு

By: Nagaraj Thu, 28 Sept 2023 07:12:04 AM

மிக நீண்ட இடைவெளிக்கு பின்னர் படம் தயாரிக்க வந்துள்ளேன்... சௌந்தர்யா ரஜினிகாந்த் பதிவு

சென்னை: 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் படம் தயாரிக்க வந்துள்ளதாக சௌந்தர்யா ரஜினிகாந்த் பதிவிட்டுள்ளார். இது செம வைரலாகி வருகிறது.

நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த். ‘கோச்சடையான்’, தனுஷின் ‘வேலையில்லா பட்டதாரி 2’ போன்ற படங்களை இயக்கினார்.

சௌந்தர்யா நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது மீண்டும் சினிமாவுக்கு வந்துள்ளார். மேலும் அமேசான் பிரைம் ஓடிடி இயங்குதளத்துடன் இணைந்து ‘கேங்க்ஸ்’ என்ற புதிய வெப் சீரிஸைத் தயாரித்து வருகிறார்.

after 13 years,directed,producers chair, ,தயாரிப்பாளர், நீண்ட இடைெளி, பதிவு, படப்பிடிப்பு, 13 ஆண்டு

நோவா ஆபிரகாம் இயக்கிய இந்த வெப் சீரிஸில் நடிகர் அசோக் செல்வன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ‘கேங்க்ஸ்’ வெப் சீரிஸின் பூஜை சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இந்நிலையில் இந்த வெப் சீரிஸின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

இதுகுறித்து சௌந்தர்யா தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “கோவா படத்தை 2010-ல் தயாரித்தேன். 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தயாரிப்பாளர் நாற்காலிக்கு வந்துள்ளேன். படப்பிடிப்பு தொடங்கியுள்ளது” என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு வைரலாகி வருகிறது.

Tags :