Advertisement

பொன்னியின் செல்வனில் நானும் ஒரு அங்கமாக இருப்பது பெருமை

By: Nagaraj Fri, 09 Sept 2022 6:04:04 PM

பொன்னியின் செல்வனில் நானும் ஒரு அங்கமாக இருப்பது பெருமை

சென்னை:பொன்னியின் செல்வன் படம் வரப்போகிறது இதில் நானும் ஒரு அங்கமாக இருப்பது என்பது பெருமையாக உள்ளது என்று நடிகர் கார்த்தி தெரிவித்தார்.

பொன்னியின் செல்வன் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் திரைபிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். இதில் நடிகர்கள் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், பிரபு, நாசர், சரத்குமார், ரகுமான், திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, ஷோபிதா, அதிதி ராவ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதில் கலந்துக் கொண்ட நடிகர் கார்த்தி பொன்னியின் செல்வன் படம் குறித்து செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது: பல ஆண்டுகள் தமிழ் மக்கள், தமிழ் ரசிகர்கள் எதிர்ப்பார்த்து கொண்டிருந்த ஒரு தருணம். பொன்னியின் செல்வன் படம் வரப்போகிறது இதில் நானும் ஒரு அங்கமாக இருப்பது என்பது பெருமையாக உள்ளது.

ponniyinselvan,karthi,udalmozhi,kharakarana,vandiyathevan ,பொன்னியின்செல்வன், கார்த்தி, உடல்மொழி, கதாபாத்திரம், வந்தியத்தேவன்

மற்ற படங்களில் பணியாற்றும் போது நம் சிந்தனைகள் வெளியே சென்று வரும் இதில் பணியாற்றும் போது எங்கிருந்தாலும் சிந்தனை அந்த கதாப்பாத்திரத்திலேயே இருக்கும். இதில் நடித்த அனைவருக்கும் இதே உணர்வு தான் இருந்தது.

தமிழ் சினிமாவில் இருக்கக்கூடிய அனைத்து பெரிய நடிகர்களும் இப்படத்தில் இருக்கிறார்கள் மொத்த தமிழ் திரையுலகத்தையும் பொன்னியின் செல்வன் படத்தில் நீங்கள் பார்ப்பீர்கள். உங்கள் அன்பு எப்பொழுதும் தேவை. இந்த படத்தில் எல்லா கதாப்பாத்திரங்களும் மிக முக்கியமானவை. ஒவ்வொரு கதாபாத்திரமும் ரொம்ப அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதில் பாதி கதாபாத்திரங்கள் உண்மையாக வாழ்ந்தவை. பாதி கதாபாத்திரம் கற்பனையாக வடிவமைக்கப்பட்டது. வந்தியத்தேவன் எல்லா கதாபாத்திரத்தையும் சந்திக்கக் கூடியவை எல்லாரிடமும் ஒரே மாதிரி பேச முடியாது. உடல் மொழி பேசுகிற மொழி ஒவ்வொருவரிடமும் மாறும். பொன்னியின் செல்வன் படத்தில் அந்த காலக்கட்டத்தில் வாழ வேண்டும் என்றார்.

Tags :
|