- வீடு›
- பொழுதுபோக்கு›
- இந்தியாவில் இசைத் தொழில் முனைவில் முனைவர் பட்டம் ஒரே நபர் நான்தான்... ஹிப் ஹாப் ஆதி தகவல்
இந்தியாவில் இசைத் தொழில் முனைவில் முனைவர் பட்டம் ஒரே நபர் நான்தான்... ஹிப் ஹாப் ஆதி தகவல்
By: Nagaraj Wed, 22 Mar 2023 11:41:57 PM
சென்னை: ஒரே நபர் நான்தான்... இந்தியாவிலேயே இசைத் தொழில் முனைவில் முனைவர் பட்டம் பெற்ற ஒரே நபர் நான்தான் என்று நடிகரும் இசை தயாரிப்பாளருமான ஹிப் ஹாப் தமிழா ஆதி கூறியுள்ளார்.
தமிழ் பட உலகின் முன்னணி நடிகரும், இசையமைப்பாளருமான ஹிப்ஹாப் ஆதி தற்போது இரண்டு படங்களில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே.
தற்போது, இசைத் தொழில்முனைவில் முனைவர் பட்டம் முடித்துள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, ‘மகிழ்ச்சியான விஷயம், நான் பிஎச்டி முடித்துள்ளேன். இனிமேல் நான் டாக்டர் ஹிப் ஹாப் தமிழா ஆதி. ஆனால் படித்து வாங்கிய பட்டம்.
இசைத் தொழில்முனைவில் முனைவர் பட்டம் முடித்துள்ளேன். எனக்கு தெரிந்த வரையில் இந்தியாவில் முதன்முறையாக இத்துறையில் முனைவர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது என்றார் பெருமிதத்துடன்.