- வீடு›
- பொழுதுபோக்கு›
- என்னை வைத்து படம் இயக்கவே எனக்கு நேரம் இல்லை
என்னை வைத்து படம் இயக்கவே எனக்கு நேரம் இல்லை
By: Nagaraj Wed, 23 Nov 2022 11:17:57 AM
சென்னை: என்னை இயக்கவே நேரம் இல்லை என்று இயக்குநர் எஸ்.ஜே. சூர்யா தெரிவித்துள்ளார்.
புஷ்கர் – காய்த்ரி தயாரிப்பில் எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் வதந்தி இணையத் தொடரின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை அடையாறில் நடைபெற்றது. இதில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா, நாசர், லைலா, தயாரிப்பாளர் புஷ்கர் காய்த்ரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். எஸ்.ஜே.சூர்யா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தத் தொடரை ஆன்ட்ரியூ லூயிஸ் இயக்கி உள்ளார்.
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் டிசம்பர் 2ம் தேதி வெளியாக உள்ளது. விழாவில் எஸ் ஜே சூர்யா பேசுகையில், நீ நல்லது செய்தால் உனக்கு நல்லது நடக்கும் என்று சொல்வார்கள். நான் நடிப்பதற்குத் தான் வந்தேன்.
ஆனால் அது தற்போது தான் அமைந்துள்ளது. என்னுடைய உதவி இயக்குநர் மூலமாக எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. எனக்குப் பெரிய வெறி இருந்தது. என்னுடைய தடைகளை எல்லாம் அடித்து உடைத்து தற்போது அதைக் கடந்து வந்துள்ளேன். திரில்லர் என்றால் நிச்சயம் அதில் பொழுது போக்கு இருக்கும்.
ஒவ்வொரு கைரேகையும் வித்தியாசம் அது போல ஒவ்வொரு மூளையும் வித்தியாசம். சிறந்த இயக்குநர்கள் உடன் குழு சேரும் போது தான் ஒருவர் சிறந்த நடிகராக முடியும். என்னை வைத்து படம் இயக்கவே எனக்கு நேரம் இல்லை.
கடவுள் அருள் இருந்தால் மீண்டும் அஜித், விஜய் அடுத்து வைத்து படம் இயக்குவேன். இவ்வாறு அவர் பேசினார். இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.