- வீடு›
- பொழுதுபோக்கு›
- மீ டூவால் தப்பினேன்; சாய்பல்லவி ஓப்பன் டாக்
மீ டூவால் தப்பினேன்; சாய்பல்லவி ஓப்பன் டாக்
By: Nagaraj Sat, 12 Dec 2020 10:04:12 PM
தப்பி விட்டேன்... மீ டூ இயக்கத்தால், முத்தத்தில் இருந்து தான் தப்பித்ததாக, நடிகை சாய் பல்லவி கூறியுள்ளார்.
கடந்த, 2018ம் ஆண்டு, மீ டூ இயக்கம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பல்வேறு துறைகளைச் சேர்ந்த பெண்கள், பாலியல் துன்புறுத்தல்களால் தாங்கள் பாதிக்கப்பட்டது குறித்து, சமூக வலைதளங்களில் பகிரங்கமாக வெளியிட்டதே, மீ டூ இயக்கம் என, கூறப்பட்டது. திரைத் துறையினர் முதல், மத்திய அமைச்சர் வரை, பல பிரபலங்களும் இதில் சிக்கினர்.
இந்நிலையில், அந்த மீ டூ இயக்கத்தால், முத்தத்தில் இருந்து தான்
தப்பித்ததாக, மாரி 2 உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்த, நடிகை சாய் பல்லவி
கூறியுள்ளது, சலசப்பை ஏற்படுத்தியுள்ளது. சாய் பல்லவி கூறியதாவது:
ஒரு
படத்தில் நான் நடித்தபோது, முத்தக் காட்சி வந்தது. அந்த காட்சியில்
என்னால் நடிக்க முடியாது என கூறினேன். எனினும், இயக்குனர் என்னை
வற்புறுத்தினார். அப்போது என்னுடன் பணியாற்றிய படத்தின் கதாநாயகர், எனக்கு
ஆதரவாக பேசினார். மீ டூ விவகாரத்தை குறிப்பிட்டு அவர் பேசினார். அதன்பின்,
அந்த காட்சியில் நடிக்க, இயக்குனர் என்னை வலியுறுத்தவில்லை என்றார்.