Advertisement

வடிவேலு பாடிய பாடலை தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்கிறேன்

By: Nagaraj Sun, 21 May 2023 07:08:18 AM

வடிவேலு பாடிய பாடலை தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்கிறேன்

சென்னை: தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்கிறேன்... ஏ.ஆர். ரகுமான் இசையில் வடிவேலு பாடியுள்ள பாடலை தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருப்பதாக நடிகர் சூரி தெரிவித்துள்ளார்.

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் - கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ளது மாமன்னன் திரைப்படம். இந்த படத்தை வெளியிட ஜூன் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

mamannan,movies,song,actor suri,rasakannu ,மாமன்னன், படங்கள், பாடல், நடிகர் சூரி, ராசாக்கண்ணு

இப்படத்தின் பின்னணி வேலைகள் இறுதிக்கட்டதை எட்டியுள்ள நிலையில், படத்தின் முதல் பாடல் கடந்த 19ம் தேதி மாலை வெளியானது. ஏ.ஆர். ரகுமார் இசையில், யுகபாரதி வரிகளில் வடிவேலு பாடியுள்ள இந்த பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு காணப்படுகிறது.

ராசாக்கண்ணு எனத் தொடங்கும் இப்பாடலைத் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருப்பதாகவும், இப்பாடல் மனதை என்னமோ செய்வதாகவும் நடிகர் சூரி தெரிவித்துள்ளார்.

மாமன்னன் படத்தின் படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து சூரி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Tags :
|
|