- வீடு›
- பொழுதுபோக்கு›
- ரஜினியை அடிப்பது போன்ற காட்சி இருந்ததால் நடிக்க மறுத்துவிட்டேன்; நடிகர் ஜெயராம் விளக்கம்
ரஜினியை அடிப்பது போன்ற காட்சி இருந்ததால் நடிக்க மறுத்துவிட்டேன்; நடிகர் ஜெயராம் விளக்கம்
By: Nagaraj Sat, 06 June 2020 09:10:35 AM
முத்து படத்தில் சரத்பாபு நடித்த கேரக்டரில் ஜெயராம் நடிக்க இருந்ததாராம். ரஜினியை அடிப்பது போல் காட்சிகள் இருந்ததால் அவர் நடிக்க மறுத்து விட்டாராம்.
ரஜினியின் திரையுலகில் மிகப்பெரிய வெற்றிப் படமாக முத்து படம் கருதப்படுகிறது இந்த படத்தில் அவர் எளிமையாக வேலைக்காரன் தோற்றத்தில் நடித்திருப்பார். ரஜினியின் எஜமானராக நடிகர் சரத் பாபு கேரக்டர் பெரிய அளவில் பேசப்பட்டது.
இந்நிலையில் முத்து படத்தில் தன்னை எஜமானர் கதாபாத்திரத்தில் நடிக்க கூப்பிட்டனர். ஆனால் அந்த படத்தில் நடிக்க நான் மறுத்து விட்டேன் என நடிகர் ஜெயராம் தெரிவித்துள்ளார். மேலும் இதற்கான விளக்கத்தையும் அவர் அளித்துள்ளார்.
முத்து படத்தில் ரஜினி கேரக்டரை கன்னத்தில் அறையும் ஒரு காட்சி இருப்பதை அறிந்ததும் இந்த படத்தில் தான் நடிக்க விரும்பவில்லை. சூப்பர் ஸ்டார் ரஜினியை அப்போது தனக்கு அதிகமாக தெரியாது. தமிழில் மிகப் பெரிய ஸ்டாராக இருக்கும் ரஜினியை அடிப்பது போன்ற காட்சி இந்த படத்தில் இடம் பெற்றுள்ளது. எனவே இந்த படத்தில் நடிக்க மறுத்து விட்டேன் என ஜெயராம் தெரிவித்துள்ளார்.