- வீடு›
- பொழுதுபோக்கு›
- காந்தாராவை ஆன்மீக படமாகவே பார்க்கிறேன்... நடிகர் ஆர்.கே.சுரேஷ் தகவல்
காந்தாராவை ஆன்மீக படமாகவே பார்க்கிறேன்... நடிகர் ஆர்.கே.சுரேஷ் தகவல்
By: Nagaraj Sun, 06 Nov 2022 8:41:08 PM
சென்னை: அம்மன் திரைப்படம் முதல் இன்று வெளியான காந்தாரா திரைப்படம் வரை அனைத்தையும் ஆன்மீக படங்களாக தான் பார்க்கின்றேன். நம்ம ஊரு கருப்பண்ணசாமி தான் அங்கு காந்தாரா என்று தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்.கே.சுரேஷ் கருத்து தெரிவித்துள்ளார்.
கன்னடத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது காந்தாரா. மேலும் வசூலையும் அள்ளி வருகின்றது. ரிஷப் செட்டி இயக்கத்தில் தொன்மக் கதையை மையமாகக் கொண்டு வெளியாகி உள்ள திரைப்படம் காந்தாரா. இத்திரைப்படம் 1800-களில் குறுநில மன்னர் ஒருவர் பழங்குடிகளுக்கு வனப்பகுதியை ஒட்டிய நிலத்தை தானமாக வழங்குகின்றார்.
ஆனால் அவருடைய சந்ததியினர் தங்களின் பூர்வீக நிலத்தை
பழங்குடியினரிடமிருந்து பறிக்க முயற்சிக்கும் செயல்தான் இந்த படமாகும்.
துன்பங்களையும் அதிரடியான சண்டை காட்சிகளையும் சேர்த்து நல்ல படமாக ரிஷப்
கொடுத்திருக்கின்றார். கன்னடத்தில் வரவேற்பு பெற்றதை தொடர்ந்து தற்போது
தமிழ், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் நல்ல வரவேற்பு பெற்றது.
இத்திரைப்படம்
குறித்து நடிகரும். தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் கூறியுள்ளதாவது,
இந்துத்துவா திரைப்படமாக நான் இதை பார்க்கவில்லை. அன்று வெளியான அம்மன்
திரைப்படம் முதல் இன்று வெளியான காந்தாரா திரைப்படம் வரை அனைத்தையும்
ஆன்மீக படங்களாக தான் பார்க்கின்றேன். நம்ம ஊரு கருப்பண்ணசாமி தான் அங்கு
காந்தாரா. ஆன்மிக படங்கள் என்றைக்கும் வெற்றி பெறும் என குறிப்பிட்டு
இருக்கின்றார்.