Advertisement

சந்திரமுகியில் வடிவேல் அழுதால் நமக்கு சிரிப்பு வரும்

By: Nagaraj Tue, 26 Sept 2023 6:37:30 PM

சந்திரமுகியில் வடிவேல் அழுதால் நமக்கு சிரிப்பு வரும்

சென்னை: மாமன்னன் பட வடிவேலுவுக்கும், சந்திரமுகி வடிவேலுவுக்கும் வித்தியாசம் என்றால் ‘மாமன்னன்’ படத்தில் வடிவேல் அழுதால் நமக்கு அழுகை வரும். சந்திரமுகியில் வடிவேல் அழுதால் நமக்கு சிரிப்பு வரும்” என்று நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

பி.வாசு இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் ‘சந்திரமுகி-2’. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். கங்கனா ரனாவத் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும் வடிவேலு, ராதிகா மற்றும் பல பிரபலங்கள் இதில் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு எம்எம் கீரவாணி இசையமைத்துள்ளார்.

chandramukhi 2,suspes,b. vasu,raghava lawrence ,சந்திரமுகி 2, சஸ்பெஸ், பி.வாசு, ராகவா லாரன்ஸ்

‘சந்திரமுகி 2’ தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் செப்டம்பர் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதையடுத்து படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இப்படம் குறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் கூறுகையில், சந்திரமுகி படத்தின் முதல் பாகத்திற்கும் இரண்டாம் பாகத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை.

சந்திரமுகி என்ற பெயர் மட்டும் அப்படியே உள்ளது. ஜோதிகா, சந்திரமுகியாக நினைத்துக் கொண்டார். ஆனால், இந்த பாகத்தில் உண்மையான சந்திரமுகி வந்தால் எப்படி இருக்கும் என்பது தான் கதை. வேட்டையன் கதாபாத்திரத்தில் சிறிய சஸ்பென்ஸ் இருக்கிறது. ரஜினி சார் நடிப்பை விட அதிகமாக நடிக்க வேண்டும் என்று நினைக்க கூடாது.

அது வரவும் செய்யாது. அவரது நடிப்பை அடித்துக் கொள்ள முடியாது. ரஜினி சார் ரஜினி சார் தான். மாமன்னன் பட வடிவேலுவுக்கும் சந்திரமுகி வடிவேலுவுக்கும் என்ன வித்தியாசம் என்றால் ‘மாமன்னன்’ படத்தில் வடிவேல் அழுதால் நமக்கு அழுகை வரும் சந்திரமுகியில் வடிவேல் அழுதால் நமக்கு சிரிப்பு வரும்” என்று கூறினார்.

Tags :
|