- வீடு›
- பொழுதுபோக்கு›
- பிரசாத் ஸ்டுடியோவிற்கு வருவதை திடீரென்று ரத்து செய்த இளையராஜா
பிரசாத் ஸ்டுடியோவிற்கு வருவதை திடீரென்று ரத்து செய்த இளையராஜா
By: Nagaraj Mon, 28 Dec 2020 2:47:01 PM
இன்று பிரசாத் ஸ்டுடியோவிற்கு செல்லும் பயணத்தை திடீரென ரத்து செய்துள்ளார் இசைஞானி இளையராஜா.
பிரசாத் ஸ்டூடியோவில் இசைஞானி இளையராஜாவுக்கு ஒருநாள் தியானம் செய்ய சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. இந்த நிலையில் இன்று அவர் பிரசாத் ஸ்டூடியோவுக்கு வர இருக்கிறார் என்று தகவல்கள் வெளியானது.
இதையடுத்து பிரசாத் ஸ்டூடியோ முன் பத்திரிகையாளர்கள் கூடியிருந்தனர். இந்நிலையில் தற்போது திடீரென இளையராஜா தனது பிரசாத் ஸ்டூடியோ வருகையை ரத்து செய்துவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து இளையராஜாவின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளதாவது:
உயர்நீதிமன்ற அனுமதியை தொடர்ந்து பிரசாத் ஸ்டூடியோவில் இருந்து
இசைக்கருவிகளை எடுத்துச் செல்ல இசையமைப்பாளர் இளையராஜா தரப்பினர் வந்தபோது
அறையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததாம். இதுகுறித்து இளையராஜாவின்
உதவியாளர் அனுப்பிய வீடியோவை பார்த்து அவர் மன உளைச்சலில் இருப்பதால்
பிரசாத் ஸ்டுடியோவுக்கு அவர் வரவில்லை என்று தெரிவித்துள்ளார்
இதனை அடுத்து பிரசாத் ஸ்டூடியோ முன் கூடியிருந்த பத்திரிக்கையாளர்கள் மற்றும் ரசிகர்கள் கலைந்து சென்றனர்.