Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • வழக்கை வாபஸ் பெறுவதாக அறிவித்த இளையராஜா... திரையுலக வட்டாரத்தில் பரபரப்பு

வழக்கை வாபஸ் பெறுவதாக அறிவித்த இளையராஜா... திரையுலக வட்டாரத்தில் பரபரப்பு

By: Monisha Wed, 23 Dec 2020 2:09:11 PM

வழக்கை வாபஸ் பெறுவதாக அறிவித்த இளையராஜா... திரையுலக வட்டாரத்தில் பரபரப்பு

இசைஞானி இளையராஜாவுக்கும் பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகத்தினருக்கும் இடையே கடந்த சில மாதங்களாக பிரச்சினை இருந்து வரும் நிலையில் இதுகுறித்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் புதிய மனு ஒன்றை சமீபத்தில் இளையராஜா சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தார். அவருடைய மனுவில் பிரசாத் ஸ்டூடியோவில் உள்ள தனது பொருட்களை எடுத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றும் ஒரே ஒரு நாள் அந்த இடத்தில் தான் தியானம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த மனு குறித்த விசாரணை சமீபத்தில் நடைபெற்றபோது பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகத்தை கேட்டு பதில் அளிப்பதாக பிரசாத் ஸ்டுடியோ வழக்கறிஞர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது. ஒரு சில நிபந்தனைகளுடன் இளையராஜாவுக்கு தியானம் செய்ய பிரசாத் ஸ்டூடியோ அனுமதி அளித்ததாக அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.

case,ilayaraja,prasad studio,inquiry,meditation ,வழக்கு,இளையராஜா,பிரசாத் ஸ்டூடியோ,விசாரணை,தியானம்

மேலும் இளையராஜா தனது உதவியாளர் மற்றும் வழக்கறிஞருடன் வந்து தியானம் செய்ய வேண்டும் என்றும் நிபந்தனை விதித்து இருந்ததாகவும் தெரிகிறது. இந்த நிலையில் திடீரென இந்த வழக்கில் ஒரு திருப்பம் ஏற்பட்டுள்ளது.

பிரசாத் ஸ்டுடியோ விவகாரத்தில் தனது வழக்கை வாபஸ் பெறுவதாக இசைஞானி இளையராஜா அறிவித்துள்ளார். மேலும் பிரசாத் ஸ்டூடியோ விவகாரத்தில் உரிமை கோர மாட்டேன் என்று இளையராஜா கூறியுள்ளார். பிரசாத் ஸ்டுடியோவில் உள்ள தமது பொருட்களை மட்டும் எடுத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இது திரையுலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
|