Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • கந்தர்வ லோகத்தில் பாடுவதற்காக போய்விட்டாயா? எஸ்பிபி மறைவு குறித்து இளையராஜா

கந்தர்வ லோகத்தில் பாடுவதற்காக போய்விட்டாயா? எஸ்பிபி மறைவு குறித்து இளையராஜா

By: Monisha Sat, 26 Sept 2020 10:57:47 AM

கந்தர்வ லோகத்தில் பாடுவதற்காக போய்விட்டாயா? எஸ்பிபி மறைவு குறித்து இளையராஜா

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் நேற்று மதியம் 1:04 மணிக்கு காலமானார். அவருடைய மறைவுக்கு திரையுலகப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் இசைஞானி இளையராஜா தனது நெருங்கிய நண்பர் எஸ்பிபி மறைவு குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:- "பாலு, சீக்கிரம் எழுந்து வா, உன்னை பார்க்க நான் காத்திருக்கிறேன் என்று நான் சொன்னேன். ஆனால் நீ கேட்கவில்லை. போய் விட்டாய். எங்கே போனாய்? கந்தர்வ லோகத்தில் பாடுவதற்காக போய்விட்டாயா?

playback singer,sp balasubramaniam,ilayaraja,video,sadness ,பின்னணி பாடகர்,எஸ்பி பாலசுப்பிரமணியம்,இளையராஜா,வீடியோ,துக்கம்

இங்கே உலகம் ஒரு சூனியமாகி விட்டது. உலகத்தின் ஒன்றும் எனக்கு தெரியவில்லை. பேசுவதற்கு பேச்சு வரவில்லை, சொல்வதற்கு வார்த்தை வரவில்லை, என்ன சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை. எல்லா துக்கத்திற்கும் ஒரு அளவு இருக்கு, ஆனா இதுக்கு அளவே இல்லை" என்று இளையராஜா உருக்கமாக அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல் அடக்கம் சென்னை செங்குன்றத்தை அடுத்த தாமரைப்பாக்கத்தில் உள்ள அவருடைய பண்ணை இல்ல வளாகத்தில் இன்று நடைபெறுகிறது. காவல்துறை மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நல்லடக்கம் செய்யப்படும்.

Tags :
|