Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • இந்தி பட உலகில் பாலியல் வேட்டை நடத்துபவர்கள் அதிகம்; நடிகை கங்கனா ரணாவத் சாடல்

இந்தி பட உலகில் பாலியல் வேட்டை நடத்துபவர்கள் அதிகம்; நடிகை கங்கனா ரணாவத் சாடல்

By: Monisha Wed, 23 Sept 2020 6:31:36 PM

இந்தி பட உலகில் பாலியல் வேட்டை நடத்துபவர்கள் அதிகம்; நடிகை கங்கனா ரணாவத் சாடல்

இந்தி பட உலகில் போதைப்பொருள் விவகாரம் பெரும் சர்ச்சையாக உள்ள நிலையில் தற்போது நடிகை கங்கனா ரணாவத் இந்தி பட உலகில் பாலியல் வேட்டை நடத்துபவர்கள் அதிகம் உள்ளனர் என கடுமையாக சாடியுள்ளார்.

இந்தி பட உலகில் மீ டூ புகார் சில மாதங்களாக ஓய்ந்திருந்த நிலையில் தற்போது பிரபல இந்தி இயக்குனர் அனுராக் காஷ்யப் மீது இந்தி நடிகை பாயல் கோஷ் பாலியல் புகார் கூறி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார். இந்த சர்ச்சை விவாதமாகி வருகிறது.

இந்நிலையில் நடிகை கங்கனா ரணாவத்தும் தனக்கு நடிகர்களால் பாலியல் தொல்லை ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவுகள் வருமாறு:-

bollywood,actress payal ghosh,actress kangana ranaut,sexual harassment,anurag kashyap ,பாலிவுட்,நடிகை பாயல் கோஷ்,நடிகை கங்கனா ரணாவத்,பாலியல் தொல்லை,அனுராக் காஷ்யப்

பாயல் கோஷ் சொன்ன பாலியல் புகாருக்கு அனுராக் காஷ்யப் மிகவும் தகுதியானவர். அவர் திருமணம் செய்த பெண்களுடன் உண்மையாக இல்லை. அவர்களை ஏமாற்றி உள்ளார். இந்தி பட உலகில் பல பெண் பித்தர்கள் உள்ளனர்.

பாயல் கோஷ் சொன்ன பாலியல் தொல்லை சம்பவம் எனக்கும் பெரிய கதாநாயகர்களால் ஏற்பட்டு உள்ளது. வேன் அல்லது அறைக்குள் கதவை பூட்டியோ அல்லது நடன நிகழ்ச்சியிலோ மோசமான சம்பவங்கள் நடக்கும். ஆசைக்கு இணங்க கட்டாயப்படுத்துவார்கள். இந்தி பட உலகில் பாலியல் வேட்டை நடத்துபவர்கள் அதிகம் உள்ளனர். தினமும் ஒரு இளம் பெண்ணுடன் மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறார்கள்." இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags :