- வீடு›
- பொழுதுபோக்கு›
- பார்வையாளர்களை திரையரங்குகளுக்கு வரவழைக்க... தீபாவளி வரை இலவச அனுமதி!
பார்வையாளர்களை திரையரங்குகளுக்கு வரவழைக்க... தீபாவளி வரை இலவச அனுமதி!
By: Monisha Tue, 10 Nov 2020 2:58:09 PM
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 7 மாதங்களுக்கு மேலாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்த நிலையில் இன்று முதல் திரையரங்குகள் திறக்கப்படுள்ளது. இருப்பினும் புதிய திரைப்படங்கள் வெளியாகாததால் எதிர்பார்த்த பார்வையாளர்கள் தியேட்டர்களுக்கு வரவில்லை என்று முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதே நேரத்தில் நவம்பர் மாதம் முழுவதும் விபிஎப் கட்டணத்தை ஏற்றுக்கொள்வதாக கியூப் அறிவித்துள்ளதால் தீபாவளி முதல் புதிய திரைப்படங்கள் வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் அதன் பின்னர் திரையரங்குகளில் வழக்கம்போல் கூட்டம் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் பார்வையாளர்களை திரையரங்குகளுக்கு வரவழைக்க பல்வேறு உத்திகளை திரையரங்கு உரிமையாளர்கள் செய்து வருகின்றனர். அந்த வகையில் கடலூரைச் சேர்ந்த திரையரங்கு உரிமையாளர் ஒருவர் தனது திரையரங்கில் ரசிகர்களுக்கு தீபாவளி வரை இலவச அனுமதி என்று கூறியுள்ளார்.
இன்று முதல் தீபாவளி வரை இலவச அனுமதி என்பதால் திரையரங்குகளில் கூட்டம் அதிகமாக வரும் என்றும் தீபாவளிக்கு பின் கட்டணம் வசூலிக்கப்பட்டாலும் பெருவாரியான ரசிகர்கள் திரையரங்குக்கு வர வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.