- வீடு›
- பொழுதுபோக்கு›
- ஊரடங்கு காலத்தில் நெட்பிளிக்ஸ் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு
ஊரடங்கு காலத்தில் நெட்பிளிக்ஸ் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு
By: Nagaraj Sun, 19 July 2020 6:58:57 PM
கொரோனாவால் பிற மாவட்டங்களுக்கு செல்ல முடியவில்லை. பொழுது போக்கு அம்சங்களுக்கும் வழியில்லை. சினிமா தியேட்டர்களும் இப்போது திறக்க வாய்ப்பில்லை. இதனால் மக்கள் ஓடிடி தளங்களின் வாடிக்கையாளர்களாகி வருகின்றனர்
கொரோனா மக்கள் முடங்கியுள்ள நிலையில் நெட்பிளிக்ஸில் புதிதாக ஒரு கோடி புதிய வாடிக்கையாளர்கள் இணைந்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
கொரோனா காரணமாக உலகம் முழுவதும் மக்கள் முடங்கி, பல தொழில் நிறுவனங்களும் நஷ்டமடைந்த சூழலில் ஓடிடி நிறுவனங்கள் மட்டுமே லாபம் ஈட்டி வருகின்றன.
இந்நிலையில் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து ஜூன் மாதம் வரை புதிதாக சுமார்
ஒரு கோடி புதிய வாடிக்கையாளர்கள் இணைந்துள்ளதாக அந்நிறுவனம்
வெளியிட்டுள்ளது.
இது வழக்கமாக வாடிக்கையாளர்கள் இணையும் விகிதத்தை
விட மூன்று மடங்கு என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மார்ச் மாதத்தில் இருந்த
வேகத்தை விட ஜூன் மாதத்தில் சேரும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை
குறைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் லாக்டவுன் நேரத்தில்
நெட்பிளிக்ஸின் பங்குகள் மதிப்பு 50 சதவீதம் அதிகரித்துள்ளது.