- வீடு›
- பொழுதுபோக்கு›
- பன்னிக்குட்டி படம் குறித்து படக்குழுவினர் பகிர்ந்த சுவாரஸ்ய விஷயங்கள்
பன்னிக்குட்டி படம் குறித்து படக்குழுவினர் பகிர்ந்த சுவாரஸ்ய விஷயங்கள்
By: Nagaraj Wed, 06 July 2022 5:06:49 PM
சென்னை: சுவாரஸ்ய விஷயங்களை கூறிய படக்குழுவினர்... யோகி பாபு, கருணாகரன் நடிப்பில் உருவாகியுள்ள ‘பன்னி குட்டி’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில், சில சுவாரஸ்யமான விஷயங்களை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
‘கிருமி’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அனுசரண். இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நீண்ட வருடங்களுக்குப் பிறகு ‘சுழல்’ வெப் சீரிஸின் இயக்குநர்களில் ஒருவராக அனு சரண் பணியாற்றியுள்ளார். அடுத்ததாக இவரது இயக்கத்தில் உருவாகி வெளியீட்டுக்குத் தயாராக உள்ளப் படம் 'பன்னி குட்டி'.
யோகி பாபு, கருணாகரன், லியோனி, சிங்கம்புலி, ராமர், தங்கதுரை, லக்ஷ்மி ப்ரியா எனப் பலரும் இந்தப்படத்தில் நடித்ததுள்ளனர். ஒரு அழகான நகைச்சுவை கதையாக உருவாகியுள்ள இந்தப்படம், ஜூன் 8-ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் இயக்குநர் அனுசரண், நடிகர் கருணாகரன், ராமர், தங்கதுரை, லியோனி, நடிகை லக்ஷ்மி ப்ரியா, இசையமைப்பாளர் கே எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இதில் இசையமைப்பாளர் கே கூறுகையில், “‘பன்னி குட்டி’ எனக்கு முக்கியமானப் படம். தொடர்ந்து சீரியஸான படங்களை செய்து கொண்டிருக்கும் வேளையில், இந்த படம் எனக்கு மிக நெருக்கமாக அமைந்தது. படத்தில் ஐந்து பாடல்கள் இருக்கிறது. இது உங்களுக்கு நிச்சயமாக பிடித்தப் படமாக இருக்கும். உங்களது ஆதரவு எங்களுக்கு தேவை” என்று தெரிவித்தார்.
அறிமுக நாயகி லக்ஷ்மி பிரியா பேசும்போது, “இந்தப் படத்தில் பெரிய நடிகர் பட்டாளமே இருக்கிறது. அவர்களுடன் பணிபுரிந்தது பெரிய அனுபவம். படத்தின் என்னுடைய கதாபாத்திரம் அழகாக திரையில் கொண்டுவர ஒளிப்பதிவாளர் பெரிய உழைப்பை கொடுத்துள்ளார். இசையமைப்பாளர் மற்றும் பாடலாசிரியர் சிறப்பான பாடல்களை கொடுத்துள்ளார்கள் என்று தெரிவித்தார்.
தயாரிப்பாளர் ஷமீர் கூறும்போது, “படத்தை திரையரங்குக்கு கொண்டு வர உதவிய லைகா நிறுவனத்துக்கு நன்றி. சிறிய படங்களுக்கு, திரைக்கதை நன்றாக இருந்தால் தான், பெரிய நடிகர்கள் இல்லாமலும் அதை சிறப்பாக எடுக்க முடியும். அனுசரண் இயக்குநர் மட்டும் அல்ல, சிறந்த படத்தொகுப்பாளரும் கூட. கருணாகரன் சிறந்த நடிகர், அவர் ஏற்கும் எல்லா கதாபாத்திரங்களும் சிறப்பாக இருக்கும். இந்தப் படம் அவருக்கு பெரிய வெற்றிப்படமாக அமையும் என்றார்.
இயக்குநர் அனுசரண் கூறியதாவது, “எனக்கு வாய்ப்புக் கொடுத்த லைகாவிற்கும், ஷமீருக்கும் நன்றி. வாழ்கையில் துவண்டு போன நிலையில் இருக்கும் போது, அதில் இருந்து மீண்டு வருவதற்காகவே காமெடி படம் கொடுக்க நினைத்தேன். ரவி முருகையா உடைய கதை தான் இந்த ‘பன்னி குட்டி’. இந்த கதையை தயாரிப்பாளரிடம் கூறும்போது, அவருக்கு மிகவும் பிடித்து போனது. படத்தில் லியோனி சார் நடிக்க வந்தது மகிழ்ச்சியான ஒன்று. எல்லா நடிகர்களும் நெருக்கடியான சூழலில் நடித்து கொண்டிருப்பவர்கள். ஆனால் முழு அர்ப்பணிப்பையும் கொடுத்து பணியாற்றினார்கள் என்றார்.