Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • அக்டோபர், நவம்பர் மாதங்களில் ஐ.பி.எல். போட்டி நடத்தப்படலாம் -அன்ஷூமான் கெய்க்வாட்

அக்டோபர், நவம்பர் மாதங்களில் ஐ.பி.எல். போட்டி நடத்தப்படலாம் -அன்ஷூமான் கெய்க்வாட்

By: Monisha Thu, 21 May 2020 2:39:02 PM

அக்டோபர், நவம்பர் மாதங்களில் ஐ.பி.எல். போட்டி நடத்தப்படலாம் -அன்ஷூமான் கெய்க்வாட்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலகம் முழுவதும் அனைத்து துறை விளையாட்டு போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஒலிம்பிக் போட்டி ஓராண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஐ.பி.ல் போட்டி காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அனைத்து துறை வீர்கள் மற்றும் வீராங்கனைகள் வீடுகளுக்குள்ளே முடங்கியுள்ளன.

இந்நிலையில், ஐ.பி.எல். போட்டி குறித்து இந்திய கிரிக்கெட் வாரியத்தின் உயர்மட்ட கமிட்டி உறுப்பினர் அன்ஷூமான் கெய்க்வாட் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ipl cricket,corona virus,anshuman gaekwad,over 20 world cup ,ஐ.பி.எல். போட்டி,கொரோனா வைரஸ்,அன்ஷூமான் கெய்க்வாட்,20 ஓவர் உலக கோப்பை

இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடக்குமா என்பது சந்தேகம் தான். உலக கோப்பை போட்டி தள்ளிவைக்கப்பட்டாலோ அல்லது ரத்து செய்யப்பட்டாலோ மட்டுமே ஐ.பி.எல். போட்டி நடக்கும். அதற்குரிய காலக்கட்டமான அக்டோபர், நவம்பர் மாதங்களில் ஐ.பி.எல். போட்டியை நடத்துவதற்கான வாய்ப்பு உருவாகும். அதுவும் அப்போது இந்தியாவில் எந்த மாதிரியான சூழல் நிலவுகிறது என்பதை பொறுத்தே முடிவு செய்ய முடியும். ஆனால் இப்போதைக்கு ஐ.பி.எல். குறித்து எதுவும் சிந்திக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Tags :