- வீடு›
- பொழுதுபோக்கு›
- பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை கதாபாத்திரத்தில் சரண்யா நடிக்கிறாரா?
பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை கதாபாத்திரத்தில் சரண்யா நடிக்கிறாரா?
By: Nagaraj Sat, 12 Dec 2020 3:15:39 PM
இனி முல்லை கதாபாத்திரத்தில் இவர்தான்...பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் நடிகை சித்ரா. இந்த தொடரில் ரசிகர்களை கவர்ந்த ஜோடி என்றால் கதிர் மற்றும் முல்லை ஜோடிதான்.
இவர்களுக்காகவே ஏராளமான ரசிகர்கள் இந்த தொடரை கண்டு களித்து வந்தனர். பாண்டியன் ஸ்டோர் சீரியல் மூலம் கொடிகட்டி பறந்த வந்த சித்ரா இரண்டு நாட்களுக்கு முன்பு திடீரென சென்னை நசரத்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது அவரது ரசிகர்கள் மத்தில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சித்ராவின் தற்கொலை குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், பாண்டியன் ஸ்டோர் சீரியலை முல்லை இல்லாமல் எப்படி பார்க்க போகிறோம்
என ரசிகர்கள் கூறி வருகின்றனர். அந்த கதாபாத்திரத்திற்கு சித்ராவை தவிர
வேறு யாரும் சரியாக இருக்க மாட்டார்கள் எனவும் கூறி வருகின்றனர்.
இனி
முல்லை கதாபாத்திரத்தில், சித்ராவுக்கு பதிலாக சரண்யா நடிக்கப்போவதாக
தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது. சரண்யா ஏற்கனவே விஜய் தொலைக்கட்சியில்
நெஞ்சம் மறப்பதில்லை மற்றும் ஆயுத எழுத்து போன்ற சீரியலில் நடித்து
பிரபலமானவர். இருப்பினும் இவரை முல்லை கதாபாத்திரத்தில் ரசிகர்கள்
ஏற்றுக்கொள்வார்களா என்பதுதான் கேள்விக்குறியாக உள்ளது.