Advertisement

நடிகர் சிவக்குமார் கடைசி வரை வாங்கிய சம்பளம் இவ்வளவுதானா?

By: Nagaraj Sat, 29 Oct 2022 6:51:59 PM

நடிகர் சிவக்குமார் கடைசி வரை வாங்கிய சம்பளம் இவ்வளவுதானா?

சென்னை: நடிகர் சிவக்குமார் கடைசி வரை ரூ.25 ஆயிரம்தான் சம்பளம் வாங்கியுள்ளார் என்று தெரிய வந்துள்ளது. நடிகர் சிவகுமார் தற்போது நடிப்பை முற்றிலுமாக நிறுத்திவிட்டு மனைவி, குழந்தைகள், பேரக்குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.

ஆரம்ப காலத்தில் தமிழ் சினிமாவுக்கு பல வெற்றி படங்களை கொடுத்தவர். 1965ல் தனது திரையுலக பயணத்தை தொடங்கிய சிவகுமார் பல வெள்ளி விழா படங்களை கொடுத்துள்ளார். மேலும் இவரது நடிப்பில் வெளிவந்த பத்ரகாளி, ஆட்டுக்கார அலமேலு, அன்னக்கிளி, ரோஜாப்பூ ரவிக்கைக்காரி போன்ற படங்கள் 175 நாட்கள் ஓடி சாதனை படைத்தது.

இதன் மூலம் திரையுலகில் வெற்றி நாயகனாக வலம் வந்து கடைசி வரை 25,000 சம்பளம் மட்டுமே பெற்றுள்ளார். அவர் பெற்ற அதிக சம்பளமும் இதுவே. இது நிச்சயமாக பலரை ஆச்சரியப்படுத்தும். ஏனென்றால் இன்றைய காலகட்டத்தில் நடிகர்கள் ஒரு படம் வெற்றி பெற்றவுடன் சம்பளத்தை பல மடங்கு உயர்த்தி விடுகிறார்கள்.

crawling,markandeya actor,sivakumar,tamil cinema ,சிவகுமார், தமிழ் சினிமாவில், மார்க்கண்டேய நடிகர், ரோஜாப்பூ ரவிக்கைக்காரி

குறிப்பாக தற்போது முன்னணி நடிகர்கள் படம் ஓடினாலும் ஓடாவிட்டாலும் சம்பளம் பல கோடியாக வேண்டும் என்று தயாரிப்பாளர்களை நச்சரித்து வருகின்றனர். அப்படியிருக்கையில் சிவகுமார் வெள்ளி விழா படங்களை கொடுத்தாலும் தயாரிப்பாளரிடம் சம்பளம் எதுவும் கேட்க மாட்டார்.

எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வார். இதுகுறித்து அவரிடம் பலர் கேட்டுள்ளனர். நான் ஒருவன் மட்டும் படத்தில் நடிக்கவில்லை. இது பலரின் பணியை உள்ளடக்கியது. எனவே இந்த வெற்றியில் அனைவருக்கும் பங்கு உண்டு என்றார்.

அதை விடுத்து, படம் வெற்றி பெற்றதால் அதிக சம்பளம் வாங்குவது நியாயமில்லை. எனக்கு தயாரிப்பாளர் கொடுத்த இந்த சம்பளம் போதும் என்று கூறி இருக்கிறார். அந்த வகையில் சிவகுமார் சினிமாவில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் ஹீரோவாக இருந்து வருகிறார்.

Tags :