- வீடு›
- பொழுதுபோக்கு›
- புஷ்பா-தி ரூல் படத்தின் கிளிப் ஏப்ரல் 8ம் தேதி வெளியாகும் என தகவல்
புஷ்பா-தி ரூல் படத்தின் கிளிப் ஏப்ரல் 8ம் தேதி வெளியாகும் என தகவல்
By: Nagaraj Mon, 27 Feb 2023 10:36:31 PM
சென்னை: ‘புஷ்பா-தி ரூல்’ படத்தின் கிளிப் ஏப்ரல் 8ஆம் தேதி வெளியாகும் என்றும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் ‘புஷ்பா’. படத்தின் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். செம்மரக்கட்டை கடத்தலை அடிப்படையாகக் கொண்ட இந்தப் படம், தெலுங்கு மொழியில் தயாரிக்கப்பட்டு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளியாகி ரூ.350 கோடி வரை வசூலித்தது.
இப்படத்தின் இரண்டாம் பாகமான ‘புஷ்பா-தி ரூல்’ படப்பிடிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் பூஜையுடன் தொடங்கியது. இந்தப் படத்தின் ஆக்ஷன் காட்சி ஒன்று பாங்காக்கில் பிரமாண்டமாக படமாக்கப்பட உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது.
இந்நிலையில் இப்படத்தின் புதிய செய்தி ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. ‘புஷ்பா-தி ரூல்’ படத்தின் கிளிப் ஏப்ரல் 8ஆம் தேதி வெளியாகும் என்றும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன